07 செப்டம்பர் 2017

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா-017


 ஆசிரியர் தினம் மற்றும் மரம் நடுவிழா!..
   நம்ம ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில்!!.

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். இன்று செப்டெம்பர் 05 ஆம் தேதி சத்தியமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு விதைகள் வாசகர் வட்டம் சத்தியமங்கலம்  மற்றும் புதிய மாற்றம் ஈரோடு  சார்பாக  வாழ்த்துரை வழங்கி மரம் நடுவிழாவும் நடைபெற்றது. மாணவியர் தலைமையாசிரியை மற்றும் இருபால் ஆசிரியர் மேன்மக்களுக்குவாழ்த்து மடல் வாசித்தனர்.மரம் நடுதலின் சிறப்பு பற்றியும் உரையாற்றினர்.வீட்டில் நடுவதற்கான மருத்துவத்தாவரங்களின் பெயர்களையும் வாசித்தனர்.

 எனது சிறப்புரையில்.....
                         அவையில் சூழ்ந்திருக்கும் அறிவுசார்  இருபால் ஆசிரியர் மேன்மக்களே,ஈரோடு புதிய மாற்றம் குழு சார்பாக வருகைபுரிந்துள்ள மற்றும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக வருகை புரிந்துள்ள சமூக அக்கறையுள்ள சான்றோர்களே, மாணவக்குழந்தைகளே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவரான  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது  பிறந்தநாளான செப்டெம்பர் 05 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்  ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் விழா எடுத்து ஆசிரியர் மேன்மக்களைப் போற்றி வாழ்த்துகிறோம்.

                 .மாதாவும் பிதாவும் ஆகிய நம்மைப் பெற்றோர் இந்த உலகத்திற்கு நம்மைத்தந்துள்ளனர்.குருவாகிய ஆசிரியரோ இந்த உலகத்தையே நமக்குத்தருகின்றனர்.
 நிலம்,மலை,நிறைகோல்,மலர்நிகர்மாட்சியும்.,உலகியல் அறிவோடு உயர்குணம் இயையவும்.,அமைவன நூலுரை ஆசிரியர் ...
                              என்ற சங்க இலக்கியமாம் நன்னூல் உரையின் விளக்கமான  – பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும் உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவுடனும் இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து
 பொருந்தியிருக்கப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான்.என்றஉரைக்கேற்ப பொறுமை,அப்ர்ரணிப்பு,மகிழ்ச்சியோடு தன்னை அர்ப்பணித்து கற்றல் மற்றும் கற்பித்தலின் ஊடாக மாணவக்குழந்தைகளுக்கு அறிவைத்தந்து பண்புள்ள மனிதனாக வாழக்கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்களே.,அதனால்தாங்க ஆசிரியரை, 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என ஔவையார் ஆத்திச்சூடியில் கூறி இருக்கிறார். 

ஆசிரியர்கள்
           வெறும் காகிதமாக பள்ளியில் நுழைந்து மாணவக் குழந்தைகளாகிய உங்களை அறிவுப்புதையல் நிறைந்த புத்தகமாக வெளிக்கொணர்கிறார்கள்.

                  மண்கலவையாக பள்ளியில் சேர்ந்த மாணவக் குழந்தைகளை நாட்டிற்குத் தேவையான சிறந்த  வல்லுநர்களாக வடிவமைக்கிறார்கள்.,

            நன்னூல்35வது பாடலில் பொதுப்பாயிரம் பகுதியில்  மாணாக்கரின் குணங்களைப்பற்றி கூறப்பட்டுள்ள,
                     ''அன்ன மாவே மண்ணொடு கிளியே.,இல்லிக்குடமா டெருமை நெய்யரி.,அன்னர் தலையிடைகடை மாணாக்கர்''' -
                  என்ற வரிகளுக்கேற்ப,
               அன்னப்பறவை,பசு போன்ற முதல் மாணவக் குழந்தைகளையும்,மண்,கிளி போன்ற இடை மாணவக் குழந்தைகளையும்,ஓட்டைக்குடம்,ஆடு,எருமை,நெய்யரி என்னும் நெய் வடிக்கி அல்லது பன்னாடை போன்ற கடை மாணவக் குழந்தைகளையும் ஆசிரியர்  ''எங்கு நடப்படுகிறாயோ அங்கேயே மலராகு'' என்ற பொன்மொழிக்கேற்ப தம் பணியின் அர்ப்பணிப்புத்தன்மையாலும்,பொறுமையாலும் கல்வி,ஆற்றல்,ஊக்கம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,என அனைத்தையும் ஒருசேரக் கற்றுக்கொடுத்து சிந்தனையாளர்களையும்,அறிவியலறிஞர்களையும்,அறிஞர்களையும்,
ஆட்சியர்களையும்,ஆட்சியாளர்களையும்,மருத்துவர்களையும்,பொறியியல் வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர்களையும்,வேளாண்மை விஞ்ஞானிகளையும்,முப்படைத்தளபதிகளோடு நிர்வாகத்தறமையுடையவர்களையும் உருவாக்கி படிப்பாளிகளோடு சிறந்த படைப்பாளிகள் போன்ற பல்துறை வல்லுநர்களை உருவாக்கி சமூகத்தின் ஏணிகளாகவும்,தோணிகளாகவும்,பாதைகளாகவும்,படிக்கற்களாகவும்,
பாலங்களாகவும்,மெழுகுவர்த்தியாகவும்,கலங்கரைவிளக்காகவும் தன்னை அர்ப்பணித்து நாட்டின் நலனுக்காக அறிவார்ந்த சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கிவருகிறார்கள்.ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி.,உளவியல் ரீதியான பணி.,சேவைரீதியான,ஆய்வுரீதியான எல்லைகளற்ற அற்புதப்பணி ஆசிரியர் பணி.பாடப்புதக்கங்களோடு பலதுறை சார்ந்த அறிவையும் பெற வாசிப்பை ஊக்குவித்து பொது அறிவை வளர்ப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்கள்.உதாரணமாக அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியாம் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவி காரோட்டியின் மகளான திருமிகு. சி.வான்மதி அவர்கள்  கடந்தஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று  இன்று ஆட்சியாளராக உயர்வடைய இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுடைய பயிற்றுவிப்பும் வழிகாட்டலும் காரணமாகும்.

                                        இன்னொரு உதாரணமாக 1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று  அமெரிக்காவிலுள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் தமது 19 மாதக்குழந்தையாக இருந்தபோது கடுமையான மர்மக்காய்ச்சல் தாக்கியதால் தமது பார்வையையும்,கேட்கும் திறனையும் பேசும் திறனையும் முற்றிலுமாக இழக்க நேர்ந்தது.இவ்வாறாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது 7வயது குழந்தையானபோது ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்க  வந்து சேர்ந்த ஆசிரியை ஆன் சல்லிவன் என்பவரது நாற்பது ஆண்டுகால கற்பிக்கும் பணியால் அர்ப்பணிப்புத்தன்மையால் ஹெலன்கெல்லர்  கல்லூரியில் சேர்ந்து  பி.ஏ. பட்டம் பெற்றதோடு ஆங்கிலத்தோடு பிரெஞ்ச்,ஜெர்மன்,கிரேக்கம்,இலத்தீன் மொழிகளைகளையும் கற்றுத்தேர்ந்து  உலகிற்சிறந்த பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும்,சமூகப்போராளியாகவும் மாற்றி 88 வயதுவரை வாழ்வதற்கு காரணமாக இருந்தார்

      .இவ்வாறு
ஆசிரியர் பணியில் இறுதிவரை என்ன நடத்திமுடிக்கிறார் என்பதைவிட  எப்படி நடந்து கொள்கிறார் என்பதே முக்கியமாகும்.பாடம் நடத்திமுடிப்பவர்களைவிட பாடமாக நடந்துகாட்டுபவர்களையே மாணாக்கர் என்றும் நினைவில் வைத்துப்போற்றுவர்.என்பதையும் ஆசிரியர் மேன்மக்களுக்கு நினைவுபடுத்தி மனிதனை மனிதனாக உணரவைத்து ஒழுக்கமுள்ளவர்களாகவும்,பண்புள்ளவர்களாகவும்,பொறுப்புள்ளவர்களாகவும்,
அறிவுள்ளவர்களாகவும்சாதனையாளர்களைஉருவாக்குபவர்களை
மதிப்பெண்கள் பெறுவதோடு மதிப்போடு வாழவும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் மேன்மக்களை சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கி உடலும் மனமும் வளம்பெற்று நீண்ட காலம் வாழவேண்டி வாழ்த்துகிறேன். நல்வாய்ப்பினை அளித்த இப்பள்ளிக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.


 சத்தி சைக்கிள் ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள் வாழ்த்துரையில்.,

( மேடையில் நின்று பேசினால் நூற்றுக்கணக்கான மாணவ கண்மணிகளுடன் ஒன்றினைய முடியாது என கீழிறங்கி வாழ்த்தினார்)
ஐயா அவர்களது வாழ்த்துரையில்  குறிப்பிட்ட விஷயம் -
ஆசிரியர்களே நீங்கள் மாணவியரில்  யாரையும் மக்கு என ஒதுக்கித்
தள்ளாதீர்கள், அவர்களிடம் ஏதேனும் தனித்
திறமை இருக்கும் அதைக் கண்டு பிடித்து வெளிக்கொண்டு வரப் பாருங்கள்.
உலக மேதைகள் பெரும்பாலோர் லாஸ்ட்
பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் தான்அதாவது கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள்தான்..
ஆசிரியர்களானாலும் சரி, ஸ்டூடன்ட்ஸ்களாக இருந்தாலும் சரி உங்களை UPDATE செய்து கொண்டே இருந்
தால் தான் முன்னேற முடியும்.
எந்த சந்தேகம் வந்தாலும் தயக்கமின்றி
ஆசிரியர்களிடம் கேளுங்கள் பயப்பட வேண்டாம்.
பேருக்கு ஆசிரியராக இருக்காமல்
பேராசிரியராக திகழ்ந்தால் உலகம் உங்களை சிறப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் /என்று உரையாற்றிய ஜப்பார் அவர்கள் இறுதியாக 24 பக்கங்கள் கொண்ட
' ஆயிஷா'என்ற சிறு புத்தகத்தை அனைவரும் படித்து புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அப்போது 
ஒரு கிறிஸ்துவப்பள்ளியில் பயின்றஆயிஷா என்ற மாணவிக்கும் அதே பள்ளியில் விடுதி காப்பாள யுவதியாகவும், அறிவியல் ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைக்கும் நடந்த மனப்போர் பற்றி குறிப்பிட்டு ஒருமுறை வகுப்பறையிலேயே ஆயிஷா விட்டுச்சென்ற சிறு குறிப்புநோட்டில் ஆசிரியையின் பெயரை நூற்றுக்கணக்கான முறைஎழுதி அதற்கு கீழே ஆசிரியைதான் என் முதல் தாயார்.,என் முதல் ஆசிரியை,என் முதல் உயிர் என ரத்தத்தால் எழுதியிருந்ததை அறிய நேர்ந்தபோது ஆசிரியை பட்ட வேதனைக்கு அளவே இல்லையெனக் குறிப்பிட்டார்.

 ஈரோடு புதிய மாற்றம் மரம் நடு குழு சார்பாக திருமிகு.அய்யப்பன் அவர்கள் மரங்கள் நடுவதன் சிறப்பு பற்றி விழிப்புரை ஆற்றினார்.

நிறைவாக விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர் திருமிகு.யாழினி ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.
புதிய மாற்றம் ஈரோடு மற்றும் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு காடு வளர்ப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினோம்.

18 ஜூலை 2017

துப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிகழ்ச்சி..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 17 ஜூலை 2017 இன்று காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் ரீடு அமைப்பின் அலுவலக வளாகத்தில் துப்புறவுத்தொழிலாளர்களின் பணி மற்றும் வாழ்க்கையின் அவலநிலை பற்றிய ஆவணப்படம் 'கக்கூஸ்' திரையிடப்பட்டது.தொடர்ந்து விவாதநிகழ்ச்சி நடைபெற்றது.திரு. தணிக்காச்சலம் ஐயா அவர்கள் உட்பட திரு.முருகன் அவர்கள்,திரு.மணி அவர்கள்,வினோத் ராஜேந்திரன் அவர்கள்,உட்பட  42 சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து விவாதித்த நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -
           972 வது குறளுக்கேற்ப,
அனைவரும் ஒரே இனமே என்பதை உணர வேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். 
 பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் சுத்தமாக வைத்திருக்க சரியான விழிப்புணர்வினை சமூகத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்கள்,சாக்கடைகள்,மருத்துக்கழிவுகள்,
இறைச்சிக்கழிவுகள்,என குப்பைகள் தானாக உருவாவதில்லை,உருவாக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
                  துப்புறவுப்பணியை குல தொழிலாக எண்ணி தாமாக விரும்பி ஏற்பதை தவிர்க்க வேண்டும்.படித்து வேறு பணிக்கு செல்லலாம்,பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
 .சாதியை ஒழிப்பதைவிட சாதிகள் சமநிலை அடைய வேண்டும்.தலித் இனத்தவர்களிடையே உள்ள சாதிப்படிநிலை சமநிலைப்பட வேண்டும்.தலித் இனத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் அதுவும் மேல்சாதி,கீழ்சாதி என சாதிப்படிநிலை இருப்பது கொடுமையிலும் கொடுமை.
தலித் இனத்தவருக்காக அரசாங்கம் வழங்கும் சலுகைகளையும்,இலவசங்களையும்,இட ஒதுக்கீடு பணி வாய்ப்புகளையும் தலித் இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே முழு பலனையும் அனுபவிப்பதை பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்யவேண்டும்.என விவாதம் செய்து தொடங்கி வைத்தேன்.

12 ஜூலை 2017

தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க! என அன்புடன் அழைக்கிறோம்...

25 ஜூன் 2017

GSTவரி விதிப்பு முறை!-

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                           வருகிற 2017 ஜூலை மாதம் முதல் தேதி முதல்,ஒரே நாடு ஒரே வரி என்ற விதி உருவாக்கி ‘சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்னும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்த உள்ளது.எனவே,

ஜி.எஸ்.டியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
நமது நாட்டில் பலவிதமான வரிகள் அரசு மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தனிநபரிடமோ அல்லது நிறுவங்களிடம் இருந்தோ அரசு வசூலிக்கும் வரிகளை வைத்துதான் அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பலவிதமான வரிகள் விதிக்கப்படுகிறது.
இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
 ஒன்று நேர்முக வரி மற்றொன்று மறைமுக வரி.

(1) நேர்முக வரி.
                 தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்றவைகள் நேர்முக வரி எனப்படும். இந்த வரியானது குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ அரசாங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும்.

(2)மறைமுக வரி:
                   கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரி போன்றவைகள் மறைமுக வரிகளாகும். நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் இந்த வரியை உள்ளடக்கித்தான் விலைக்கு வாங்குகிறோம். இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் ,இதனை அரசிடம் கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. .

ஜி.எஸ்.டி:
                          ஒரு பொருளின் மீதோ, சேவையின் மீதோ நாம் இப்படி மறைமுகமாக கட்டும் வரிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி (Service and goods tax ). தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்தையும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை.

                தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. பாண்டிச்சேரில் நீங்கள் ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் தமிழகத்தில் அதே பொருளின் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த விலை கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறுபடும். இந்த விலைமாற்றத்திற்கான காரணம் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும் வரிவிதிப்பு தான். மாநிலங்கள் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது.

                இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது.

                     ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST),மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகையாக வசூலிக்கப்படும்.

                         மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும்.

                        மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) : இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

                 மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) : மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.

எடுத்துக்காட்டு:
                  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர் சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதே மாநிலத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% , இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் 1800 ரூபாயை வரியாக வசூல் செய்வார். இந்த தொகையானது ஆந்திர அரசின் பங்கு 900 ரூபாய் மற்றும் மத்திய அரசின் பங்கு 900 ரூபாய் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது ஆகும். இந்த வரியில் தங்களுக்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து எடுத்துக்கொள்ளும்.

                       இப்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர், தமிழகத்தில் உள்ள ஒரு வணிகருக்கு சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வரியாக 1800 ரூபாயை IGST ஆக வணிகர் வசூல் செய்கிறார். இந்த IGST தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ஆகையால் CGST மற்றும் SGST ஆகியவைகளை தனியாக செலுத்த வேண்டி இருக்காது.
மேலே, சொல்லப்பட்ட அனைத்து வரிகளுக்கான விலையும் அந்தந்த பொருளின் மீது கூட்டப்பட்டு கடைசியாக ஒரு பொருளை வாங்கும் நுகர்வோரிடம் அந்த தொகை வசூலிலிக்கப்படும்.

                      உதாரணமாக, நாம் ஒரு சோப்பை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால், அதில் மேலே சொன்ன ஜிஸ்டி வரிகளும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும்.

                         இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற மற்றும் சிக்கலான மறைமுக வரிகளை நீக்கி, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்துவதன்மூலம் வரி நிர்வாகம் மிகவும் எளிமையாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் வெளிப்படையான வரிவிதிப்பு முறையால் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், உற்பத்தியாளர்கள் வரியை எளிதாகக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் இந்த மசோதா உதவும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரியானது மாநில வரி வருவாயை பாதிக்கும் எனவும் ஒருசாரார் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். சாதாரணமாக அனைவரும் அறிந்து வைத்திருப்பது வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி என்பதுதான். மேலும் சில முக்கிய வரி வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

மறைமுக வரிகள்: 
பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி.

மையஅரசு வரிகள்: 
வருமானவரி, சிறப்பு தீர்வைகள், செல்வவரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள்.
(மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)

மாநில அரசு வரிகள்:
நிலவரி (வேளாண்மை)பதிவுக்கட்டணங்கள், தொழில், வணிகம், வேலை மீதான வரிகள், விற்பனை வரி, கேளிக்கை வரி, மோட்டார் வாகன வரி, வேளாண்மை வரி.
(மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது விற்பனை வரி)

ஆக்ட்ராய் வரி: 
நகருக்குள் வரும் பொருட்கள் மீது நகராட்சி விதிப்பது.

VAT (Value Added Tax) : மதிப்பு கூட்டப்பட்ட வரி.
ஒரு பொருளின் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி.

MODVAT:  

ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவுவது.

ஓட்டுநர் இருக்கையின் சிறப்பு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.ஓட்டுநரின் சிறப்பும்..!
அவர் இருக்கையின் பற்றிய
சிறப்பும்.மதிப்பும்
தெரியுமா உங்களுக்கு..!?
நடத்துனர் அமர்ந்திருக்கும்
இருக்கையை
CI வந்தால் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
JE வந்தால் CI எழந்துநின்று
சீட் தரவேண்டும்.
AEவந்தால் JE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
BM வந்தால் AE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
DM வந்தால் BM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
GM வந்தால் DM எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
MD வந்தால் GM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
சேர்மன் வந்தால் MD எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
செகரட்டிரி வந்தால் சேர்மன் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
அமைச்சர் வந்தால் செகரட்டிரி எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
முதல்வர் வந்தால் அமைச்சர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
கவர்னர் வந்தால் முதல்வர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
பிரதமர் வந்தால் கவர்னர் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
ஜனாதிபதி வந்தால் பிரதமர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும். இந்தியாவில்
ஜனாதிபதி மட்டுமே யார் வந்தாலும்
எழுந்துநின்று சீட் தரவேட்டியது இல்லை.
அதுபோலதான் ஓட்டுநருக்கும் அவர்இருக்கைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. அவர்யார் வந்தாலும்
எழுந்து நிற்க்தேவையும் இல்லை.
ஒட்டுநர் இருக்கையை விட்டுதரவேண்டியது
இல்லை.
அவ்வளவு உயர்வானது ஓட்டுநர் இருக்கை.
என்பதை இனியாவது தெரிந்து
கொள்ளவேண்டியது நம் கடமை.

19 ஜூன் 2017

தமிழின் சிறப்பு...

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். தமிழின் சிறப்பு
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா ?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
*இதுவே #தமிழின் சிறப்பு*
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்.
.....

வேட்டி அணியுங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். லுங்கி அணிவதை தவிர்த்து வேட்டி அணியுங்க, லுங்கி அணிவதால் அனுபவிக்கும் தொல்லைகளும்,வேட்டி அணிவதால் அனுபவிக்கும் நன்மைகளும் இதோ...
                 நீங்களே முடிவு செய்யுங்கள்.விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும்,  மரியாதையான பார்வை தரக்கூடியதும், உடலுக்கும் நன்மை தரக்கூடிய  வேட்டியை பயன்படுத்துவதா..?அல்லது  மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் இல்லாத வெளிநாட்டு உடையாம் லுங்கியை உடுத்துவதா..?

                                          ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.லுங்கி என்பது இந்திய - தமிழ் கலாச்சாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டப்படுவதால் அதாவது முனைகள் இணைத்து தைக்கப்படுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.
             மாறாக வெள்ளை வேட்டி, அதுவும் கைத்தறி வேட்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேட்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு நன்மைங்க. வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ரூபாய் செலவு செய்ய வேண்டும்!

17 ஜூன் 2017

காவல்துறை பற்றி.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.நமது தமிழ்நாடு மாநில காவல்துறை பற்றி அறிவோம் வாங்க.பதிவிட்ட நணபர் திரு.சரவண அரவிந்த் அவர்களுக்கு நன்றிங்க.
தமிழ்நாடு காவல்துறை பற்றி..
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
கடலோர காவல் துறை (Coastal Security Group)
குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
இரயில்வே காவல்துறை (Railways)
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறையில் பெண்கள்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
காவல்துறைப் பதவிகள்
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி
பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)
அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IGP)
ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Inspector)
மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector)
இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் (Head Constable)
சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I)
சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)
பட்டை எதுவுமில்லை.
நன்றி: மோகன் வழக்கறிஞர்

05 ஜூன் 2017

பனை மரம்..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நமது மாநிலத்தின் மரம் பனை மரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியானால் அதன் பயன்களும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இதோ...
பனைமரம்:
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை:
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள்:
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு:
பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.
புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இதுதான் வாழ்க்கை?


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
   வாழ்வின் எந்தக் கணம் நம்முடைய வாழ்நாள் முழுமைக்குமான அனுபவத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்று தெரிவதேயில்லை. மிக இயல்பாகக் கடந்திருக்க வேண்டிய தினமாக இருந்திருக்க வேண்டியது. இனி அந்த முகமும் கணமும் அப்படியே நினைவுகளில் உறைந்து கிடக்கும். ஞாபகப் புதையலிலிருந்து எப்பொழுது வெளியே வந்து பயமூட்டும் என்று தெரியாது. கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்தவர்.குடிபோதையில் தாறுமாறாக பேசினாலும் தக்க அறிவுரை சொன்னால் ஏற்கும் மனப்பக்குவம் உடையவர்.01.06.2017 வியாழக்கிழமை இன்று எங்களை எல்லோரையுமே பதறி நடுங்க வைத்துவிட்டார். மனித உயிரைப் போன்று பற்றுக் கோல் இல்லாதது எதுவுமேயில்லை. இல்லையா? நொறுங்கிய கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பது போலத்தான் அது- எந்தக் கணமும் சுக்கு நூறாகிவிடக் கூடும். அந்த நிரந்தரமின்மையோடுதான் ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஏதோ பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கழிப்பது போல...
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?  
(வீடுவரை உறவு)
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?  (வீடுவரை உறவு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! 
(வீடுவரை உறவு)
 

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! 
(வீடுவரை உறவு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...
(வீடுவரை உறவு)

31 மே 2017

அரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை!

அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே வெளிச்சம்?
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வழித்தடப்பேருந்துகளை சிறப்பு இயக்கத்துக்கு அனுப்புவதே தவறு! மேலிட,மேலிட உத்தரவுக்கு பணிந்து நடக்க வேண்டுமே என்பதற்காக சிறப்பு இயக்கத்திற்கு செல்லும்போது அதென்னங்க மாற்றாந்தாய் பெற்ற பிள்ளை! போன்று கேவலமாக பார்ப்பதும்?,ஒதுக்குவதும்? இதுக்குத்தாங்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்துங்க அப்படின்னு ஓயாமல் சொன்னாலும் ஒருத்தரும் கேட்பதே இல்லைங்க!...




பழைய சோறு அமிர்தமே!


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பழைய சோறு என்றால் முகத்தைச்சுளிப்பவரா? நீங்கள்..அப்படியென்றால் இந்தப்பதிவு உங்களுத்தாங்க!

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படிச் செய்வது?
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

எட்டுப் போடு எல்லாம் பறந்தோடும்!


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.யோகா ஒரு பழமையான கலை என்று நமது இந்திய வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான யோகா கலையில் எட்டுப்போடுவதும் சிறந்த கலையே! அதன் விபரத்தை படிப்போம்,பயன் பெறுவோம்...
8 க்குள் ஒரு யோகா !!!
************************
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".
நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.
சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.
சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.
இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.
இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.
காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கும்!
***********************************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.
இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!
1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!
2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்சனை குறையும் ,!!!!
3 வது 21 நாளில் ---- தொடைப் பகுதி பலம் பெறும் ,!!!!
4 வது 21 நாளில் ---- ஆண்மைக் குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறைபாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்பப் பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!
5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,
6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஸ்த்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!
7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,
8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய், கண், காது, மூக்கு கருவிகள் நோய்த் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதைச் செய்ய வயது வரம்பு இல்லை ,
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிற்பான் . மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது !!!!

போக்குவரத்துக்கழகத்தில் ??????

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இதுதாங்க போக்குவரத்துக்கழகத்தில் பிரச்சனை? 

[19:42, 16/05/2017] Gm Off Nataraj: ஓய்வு பெற்ற ஒரு தமிழக போக்குவரத்து கழக ஓட்டுனரின் கண்ணீா் மடல் :
ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..
நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாட்கள் அந்த இன்ஜின் சூட்டின் அருகிலே வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன். ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.
உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..

இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது, என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.
அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.
மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.
முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.
எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.
நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர! எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா?.
தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...
இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத் தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: முதல்வரிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்துவர திருமிகு. செங்கோட்டையன், தங்கமணி எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றுள்ளார்கள். 10 நிமிடத்தில் வருவதாக சென்றுள்ளார்கள்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: எஸ்மா சட்டம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொருந்தாது நாம் id act ஊழியர்கள் அதாவது நாம் நேரடியாக அரசு ஊழியர்கள் அல்ல அன்டர் டேக்கிங் ஊழியர்கள் அதனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாது ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ...
அத்தியாவசிய சேவை புரிபவர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம் .இதனால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம்.இந்த நிலையை உயர் நீதிமன்றம் ஒரு நபரின்வழக்கின் அடிப்படையில் ஒரு புறதீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்து அதன் மீது பேச்சுவார்த்தை நடந்து அதன் முடிவின் மீதுதொழிலாளர்கள் உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று சட்டம் உள்ளது.
ஆகவே நாம் செய்யும் வேலை நிறுத்தம் சட்டப்படியானது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள எஸ்மா சட்டம் என்பது நமக்கு பொருந்தாது. மேலும் நீதிமன்றமும் இத் தீர்ப்பிற்கு தொழிற்சங்கங்கள் விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளது.
நாளை தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் நமது சட்டப்படியான நடவடிக்கைகளையும் நமது கோரிக்கைகளையும் அதனை ஏற்காத அரசின் நிலைப்பாட்டையும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த உள்ளார்கள்.
இதன் பிறகே இரு தரப்பு வாதத்தின் அடிப்படையில் விசாரணை செய்து அதன் பிறகு நமக்கு எஸ்மா பொருந்துமா? பொருந்தாதா? என நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பே தற்காலிக தீர்ப்பு.இதன் பிறகு யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செல்லவும் சட்டம் உள்ளது.
தொழிலாளர்களே இன்று வந்த நீதிமன்ற எஸ்மா சட்ட தீர்ப்பினால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொழிற்சங்கங்கள் வழிகாட்டுதல்படி நாம் செயல்படுவோம் என்று ஆணித்தரமான முடிவோடு வேலை நிறுத்தத்தை தொடர்வோம்.


ஒரு நூறு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களை நான் அறிவேன். ஒட்டுநர்/ நடத்துனர் உத்தியோகங்களில் பணியில் இருப்பவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகள் (occupational hazards) சொல்லில் வர்ணிக்க இயலாதவை. சுவாசக் கோளாறு, எலும்பு தேய்மானங்கள், இடுப்பு எலும்பு/தசை வலிகள் என அவர்களின் வாழ்வே இருண்டு கிடக்கிறது. நம் குண்டும்குழியுமான சாலைகளில் இந்த காயிலான் கடை பேருந்துகளை 30-40 ஆண்டுகள் ஓட்டுவதும், அதில் பணி நேரம் முழுவதும் இருப்பது என்பதும் துயரத்திலும் துயரமே, அவர் விரும்பி அல்ல தங்களின் வறுமை/குடும்ப சூழல் கருதியே இந்த கேடு கெட்ட வேலையில் நீடிக்கிறார்கள்/ நீடித்தார்கள்.
அவர்களின் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை 20 ஆண்டுகளாக வழங்காமல் அவர்களை அலைக்கழித்து அதை வைத்து சூதாடிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் மீது மக்கள் காறி உமிழ வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களம் காண வேண்டும்.


உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
              மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

"பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..காலை : 100 பாதாம் கொட்டைகள், மதியம் : 4 முட்டைகள்  ,இரவு : சிக்கன்/மட்டன்/மீன்
( அளவில்லாமல்)
இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்? "தினமும் இதுதான் உணவா? ஆம்..
ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."
இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும். ஆனால்..ஆனால்?
இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.
உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..
இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மாட்டோம்.
ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.
ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.
ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.
உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..
என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.
மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.
எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.
இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது 80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை என்னும் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..
எதில் சுகர் ஏறும்?
அரிசி மற்றும் கோதுமை..
அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.
கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)
எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
BMI அளவை மாற்று..
அதென்ன BMI?
உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.
இதன்படி என்ன ஆனது?
168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.
1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.
ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.
புரிகிறதா வியாபார தந்திரம்?
தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?
காலையில் 4 இட்லி
மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்
இரவு : சப்பாத்தி.
இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?
ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?
நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.
புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?
சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.
இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.
ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?
ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?
சுகர் துளியும் இல்லாத உணவு எது?
அதுதான் அசைவ உணவு.
மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.
அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.
காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.
இதை எப்படி நம்புவது?
பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?
தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.
இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..
சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.
ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.
முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்து


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?
எப்படி தெரிந்து கொள்வது?
"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!
பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,
"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.
அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.
நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.
இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)
நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.
எப்படி?
ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.
இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.
இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது
யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
வெவ்வேறு தட்ப வெப்ப நிலை ,
வெவ்வேறு உணவு பழக்கம்,
வெவ்வேறு உணவு உண்ணும் முறை,
வெவ்வேறு கலாச்சாரம்,
வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு இருக்கின்றன!
இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்.
அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".
எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".
அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.
1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.
"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.
படித்தில் உணர்ந்தது
சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

மகனுக்கு உபதேசம்!..

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். தந்தை ஒருவர் தன் மகனுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக  கூறிய அறிவுரைகள் இதோ தங்களுக்கும் பயன்படும்?

அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.
***********************************************************************





இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

29 மே 2017

கலைஞர் மு.கருணாநிதி-பாரத ரத்தினம்!

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.  முகநூல் நண்பர் திரு.அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் அவர்களின் கட்டுரை தங்களது கவனத்திற்காக...
பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!
\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.
ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.
மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.
பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!
அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.
ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.
ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?
அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.
ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\
இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.
சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்
அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.
அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011
அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......
குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.
(திருவாரூர் 2016லிருந்து இப்போது தன் 94 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்)
இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.
தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர் ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.
கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு "பாரத்ரத்னா" விருது கொடுக்க!
கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!
மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் என்னும் சாதாரன திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனக்குரலின் எதிரொலி.....
 நன்றி; http://abiappa.blogspot.com/2014/12/blog-post_27.html

23 மே 2017

நெற்பானையும் எலியும்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்  படித்து இன்புற்ற பாடல்! 

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!




உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
 ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
 மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
 பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!

 கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!














எம்மதமும் சம்மதமே!


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ''எம்மதமும் சம்மதம்'' என்ற தலைப்பிலான மத ஒற்றுமைக் கவிதை  தங்களுக்காக.........


 எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7

வேற்றுமை பலவிலும்  ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
 மதமெனக் கொண்டவர் தமிழர்களே . 8

எம்மதம் ஆயினும் சம்மதம்  என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு
அம் மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திடலாமோ தமிழறிவு?9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும்  சகித்திடுமோ?
விதவிதம் பொய் சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.10


மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...