04 நவம்பர் 2016

ஆலோசனைக் கூட்டம்,நம்ம சத்தியில்!....

                                  வாசிப்பே சுவாசிப்பு!

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.


                                             சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-2016-
                                                       ஆலோசனைக்கூட்டம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
            2016 நவம்பர் 4-ந் தேதி இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் சத்தியில் புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருமிகு.யாழினி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.


                சத்தியமங்கலத்தின் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு கால சுப்பிரமணியம் அவர்கள் உட்பட விதைகள் வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மற்றும் திருமிகு.ரமேஷ்குமார் ஆசிரியர் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட மேல்நிலைப்பள்ளி,திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,,திருமிகு.முத்துராஜ் அரசுப்பள்ளி ஆசிரியர்,திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,ரீடு இயக்குநர் திருமிகு.கருப்புசாமி,ஈரோடு பாரதி புத்தகாலயா திருமிகு.இளங்கோ, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவரும் மக்கள் சிந்தனைப்பேரவை உறுப்பினருமான திருமிகு.ராபின்ராஜாஜி, சத்திகிளைஅரசுப் பேருந்து நடத்துநரும் சமூக ஆர்வலருமான திருமிகு.குணசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.
 

               அப்போது கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

(1)சத்தியில் வருகிற நவம்பர் 21ந் தேதி மாலை தொடக்கவிழா நடத்துவது,
 

(2)மாவட்ட கல்வி அலுவலர்,சத்தி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்,மற்றும் ஸ்டாலின் குணசேகரன் ஆகிய சான்றோர்களால் புத்தகக்கண்காட்சியினை துவக்கிவைப்பது.
 

(3)புத்தகக்கண்காட்சி காலை10.30மணி முதல் இரவு 8.30மணிவரை நடத்துவது,
 

(4)கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக படிப்பாளர் மேடை துவக்குவது,
 

(5)ஈரோடு நிமிர்வு கலையங்கத்தின் பறை இசை நடத்துவது,(மறைந்து வரும் கிராமியக்கலைகளை வெளிக்கொணர்வது)
 

(6)சத்தியமங்கலம் வட்டார எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி பாராட்டு வழங்குவது,
 

(7)சத்தியமங்கலம் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு காலசுப்பிரமணியம் அவர்களின் புத்தகங்கள் தொகுத்து வெளியிடுவது,
 

(8)பள்ளி மாணவ,மாணவியருக்கு அறிவுசார் போட்டிகள் நடத்துவது,
 

(9)மந்திரமா?தந்திரமா?நிகழ்ச்சி திருமிகு முத்து அவர்களால் நடத்துவது,
 

(10)நாளிதழ்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,துண்டறிக்கைகள்,சுவரொட்டிகள்,விளம்பரத் தட்டிகள்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் வாயிலாக விளம்பரங்கள் செய்வது,
 

(11)சமூக விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடுவது,
 

(12)சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுப்பது,
பட்டிமன்றங்கள் நடத்துவது,


 (13) சிறந்த பேச்சாளர்களை அழைத்து மக்களுக்கு விழிப்புரை நடத்துவது,
 

(14)சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது,
 

(15) ஆலோசனைக்கூட்டத்தில் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாதவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாத 8ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு இன்று நடைபெற்ற இடம் பற்றாக்குறை காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள  P.V.லாட்ஜில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துவது,
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி 2016 நிகழ்ச்சி 
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாக
             திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
             திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
             திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491
 ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் - 9443021196
(அ) திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திருமிகு.சத்தியமங்கலம் முத்து,
                            (மந்திரமா?தந்திரமா?)
(இ) திருமிகு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ)  திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ)  திருமிகு.செல்வராஜ்,

             ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இன்று கலந்துகொள்ள இயலாத சமூக ஆர்வலர்கள் இதனையே அழைப்பாக ஏற்று  வருகிற 8 ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பேருந்து நிலையம் அருகிலுள்ள  P.V.லாட்ஜ் கூட்ட அரங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
என அன்பன்,
C.பரமேஸ்வரன்,9585600733
விதைகள் வாசகர் வட்டம்-
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்
.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம்.
   (1) திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
  (2)திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
  (3)திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...