19 நவம்பர் 2016

சத்தி புத்தகத்திருவிழா-2016

 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                     2016நவம்பர் 19 ந் தேதி இன்று  சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவிற்கான வாகன ஒலிபெருக்கி பிரச்சாரத்தில்  இசுலாமிய சகோதரருடன் நான்...


12 நவம்பர் 2016

ருசிகர விவாத நிகழ்ச்சி-2016

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.  நம்ம சத்தியமங்கலத்தில்  2016 வருகிற நவம்பர்  21ந் தேதி முதல் 27 ந் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.அது சமயம் நிறைவு நாளான 27 ந் தேதி அன்று சாலைப்பயணத்தில் தொல்லையா?இல்லையா? என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சுவையான விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது..அனைவரும் வருக.விவாதத்தில் பங்கு பெறுக.
 தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்... 
பரமேஸ்வரன் தாளவாடி கிளை   9585600733 
          குணசேகரன் சத்தி கிளை 9976617530

08 நவம்பர் 2016

சத்தி புத்தகத் திருவிழா-2016

                             தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
                                                           கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.

   

 ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''-உறுதிமொழி
                  
                   சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்
                             வழங்கும் மாபெரும் புத்தகத்திருவிழா.
                           மறு பரிசீலனைக்கூட்டம்.
                                நாள்; 2016நவம்பர்8 ந் தேதி  மாலை5.00மணி.
                              இடம்; பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கு.
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நடத்தும் புத்தகக்காட்சி திருவிழா பற்றிய மறு பரிசீலனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் கூடுதலாக  சமூக ஆர்வலர்கள் இருபது நபர்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,

சமூக வளர்ச்சிக்காக பயன்படும் சத்தி புத்தகத் திருவிழாவில்
  ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''
என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இத்துடன் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் ஒற்றுமை காப்பதாக ஏற்றுக்கொண்டதும் வரவு,செலவு உட்பட செயல்பாட்டில் குறைகளை சுட்டிக்காட்டவும்,தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளவும் வேண்டும் என்ற ஒருமித்த கருத்து ஏற்பும்.சமூக வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. 
என அன்பன்,
பரமேஸ்வரன், 9585600733
செயலாளர், 
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
  

06 நவம்பர் 2016

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா-2016

                       சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
              வாங்க, சாதி,மத,இன,அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஏற்ற தாழ்வின்றி சமமாகப் பணியாற்றுவோம்.


 
மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.
                           வருகிற 2016நவம்பர்21ந் தேதி முதல் 27ந் தேதி வரை நம்ம சத்தியமங்கலம் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ள புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனை மறுபரிசீலனைக் கூட்டம் நாளை (அதாவது 2016 நவம்பர்8 ந் தேதி)மாலை 5.00மணிக்கு சத்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள (P.V.LODGE) பி.வி. லாட்ஜ் கூட்ட அரங்கில் திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு துவங்க உள்ளதால் முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்களும் தகவல் கிடைக்கப்பெறாமல் இதனை தகவலாகக் கிடைக்க பெற்றவர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்று சமூகத்தின் மீது அக்கறையுள்ள மற்றவர்களையும் அழைத்துவந்து தவறாமல் பங்கேற்று தங்களது ஆலோசனைகளைக் கூறி சமூக வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஒருங்கிணைப்புக்குழு,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.
 

தொடர்புகொள்ள,
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்,
தலைவர் -  திரு.யாழினி ஆறுமுகம் - 9003790297
செயலாளர் - திரு.C.பரமேஸ்வரன்,-   9585600733
பொருளாளர்-  திரு.வினோத் ராஜேந்திரன்,-  9626614491
ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் -   9443021196

செயற்குழு உறுப்பினர்கள்........
(அ) திரு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திரு.சத்தியமங்கலம் முத்து,
(மந்திரமா?தந்திரமா?)
(இ) திரு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திரு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ) திரு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ) திரு.செல்வராஜ்,

04 நவம்பர் 2016

ஆலோசனைக் கூட்டம்,நம்ம சத்தியில்!....

                                  வாசிப்பே சுவாசிப்பு!

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.


                                             சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-2016-
                                                       ஆலோசனைக்கூட்டம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
            2016 நவம்பர் 4-ந் தேதி இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் சத்தியில் புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருமிகு.யாழினி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.


                சத்தியமங்கலத்தின் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு கால சுப்பிரமணியம் அவர்கள் உட்பட விதைகள் வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மற்றும் திருமிகு.ரமேஷ்குமார் ஆசிரியர் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட மேல்நிலைப்பள்ளி,திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,,திருமிகு.முத்துராஜ் அரசுப்பள்ளி ஆசிரியர்,திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,ரீடு இயக்குநர் திருமிகு.கருப்புசாமி,ஈரோடு பாரதி புத்தகாலயா திருமிகு.இளங்கோ, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவரும் மக்கள் சிந்தனைப்பேரவை உறுப்பினருமான திருமிகு.ராபின்ராஜாஜி, சத்திகிளைஅரசுப் பேருந்து நடத்துநரும் சமூக ஆர்வலருமான திருமிகு.குணசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.
 

               அப்போது கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

(1)சத்தியில் வருகிற நவம்பர் 21ந் தேதி மாலை தொடக்கவிழா நடத்துவது,
 

(2)மாவட்ட கல்வி அலுவலர்,சத்தி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்,மற்றும் ஸ்டாலின் குணசேகரன் ஆகிய சான்றோர்களால் புத்தகக்கண்காட்சியினை துவக்கிவைப்பது.
 

(3)புத்தகக்கண்காட்சி காலை10.30மணி முதல் இரவு 8.30மணிவரை நடத்துவது,
 

(4)கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக படிப்பாளர் மேடை துவக்குவது,
 

(5)ஈரோடு நிமிர்வு கலையங்கத்தின் பறை இசை நடத்துவது,(மறைந்து வரும் கிராமியக்கலைகளை வெளிக்கொணர்வது)
 

(6)சத்தியமங்கலம் வட்டார எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி பாராட்டு வழங்குவது,
 

(7)சத்தியமங்கலம் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு காலசுப்பிரமணியம் அவர்களின் புத்தகங்கள் தொகுத்து வெளியிடுவது,
 

(8)பள்ளி மாணவ,மாணவியருக்கு அறிவுசார் போட்டிகள் நடத்துவது,
 

(9)மந்திரமா?தந்திரமா?நிகழ்ச்சி திருமிகு முத்து அவர்களால் நடத்துவது,
 

(10)நாளிதழ்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,துண்டறிக்கைகள்,சுவரொட்டிகள்,விளம்பரத் தட்டிகள்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் வாயிலாக விளம்பரங்கள் செய்வது,
 

(11)சமூக விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடுவது,
 

(12)சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுப்பது,
பட்டிமன்றங்கள் நடத்துவது,


 (13) சிறந்த பேச்சாளர்களை அழைத்து மக்களுக்கு விழிப்புரை நடத்துவது,
 

(14)சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது,
 

(15) ஆலோசனைக்கூட்டத்தில் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாதவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாத 8ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு இன்று நடைபெற்ற இடம் பற்றாக்குறை காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள  P.V.லாட்ஜில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துவது,
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி 2016 நிகழ்ச்சி 
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாக
             திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
             திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
             திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491
 ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் - 9443021196
(அ) திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திருமிகு.சத்தியமங்கலம் முத்து,
                            (மந்திரமா?தந்திரமா?)
(இ) திருமிகு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ)  திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ)  திருமிகு.செல்வராஜ்,

             ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இன்று கலந்துகொள்ள இயலாத சமூக ஆர்வலர்கள் இதனையே அழைப்பாக ஏற்று  வருகிற 8 ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பேருந்து நிலையம் அருகிலுள்ள  P.V.லாட்ஜ் கூட்ட அரங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
என அன்பன்,
C.பரமேஸ்வரன்,9585600733
விதைகள் வாசகர் வட்டம்-
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்
.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம்.
   (1) திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
  (2)திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
  (3)திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...