16 செப்டம்பர் 2016

கோபிசெட்டிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்16 செப்டெம்பர் 2016

கர்நாடகாவில் தமிழர்களையும் தமிழர் வாகனங்களையும்,தமிழர்களின் வணிக நிறுவனங்களையும் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று ஒருநாள் கடையடைப்பு மற்றும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில்
கண்டன ஆர்ப்பாட்டம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
16.09.2016வெள்ளிக்கிழமை

.                இன்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை-ஈரோடு மாவட்டமும்,கொங்குநாடு மக்கள்தேசிய கட்சியும் இணைந்து கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட தலைவர் திருமிகு. B.தேவதாசன் தலைமை தாங்க,ஈரோடு மாவட்ட செயலாளர் திருமிகு.S.பொன்பாண்டி அவர்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட பிரமுகர்கள் முன்னிலை வகிக்க ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டு உச்சநீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் அவமதித்த கர்நாடகா அரசை கண்டித்தும்,மெத்தனமாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைவரும் கேட்டுக்கொண்டற்கு இணங்கி நான்(பரமேஸ்வரன்)துவக்கி வைத்து முன்னுரையில் கர்நாடகா வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரியும்,நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுநர்களை தாக்கியவர்கள் மீது உச்சநீதிமன்றம் தானே தன்னிச்சையாக வழக்கினை எடுத்து வீடியோ காட்சியை ஆதாரமாக வைத்து வன்முறையாளர்களைகைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.இந்தியாவின் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படவைக்கும் முயற்சியினை தடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
(காவிரி பற்றிய விவரங்களை
(1)Cauvery River, (2)Chola Kingdom, (3)Kallanai,(4) Karikaal Chola,(5) Raja Raja Chola, (6)Tanjore, (7)Coorg, (8)Upper Riparian State, (9)Lower Riparian State,(10) KRS Dam  - ஆகிய தலைப்புகளில் விக்கிப்பீடியாவில் தேடிப்பாருங்க,வ்வரம் தெரிஞ்சுகொள்ளுங்க) 

அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.9585600733

கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...