29 ஜூன் 2016

மாணவர் இலவச நூலகம்-தாளவாடி அறிவிப்பு

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
 ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மாணவர்களுக்காக நடமாடும் இலவச நூலகம் துவக்கி செயல்படுத்த உள்ளோம்.தங்களின் மேலான ஆலோசனைகளை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.தொடர்புக்கு
 C.பரமேஸ்வரன்,paramesdriver@gmail.com +91 9585600733
அரசுப் பேருந்து ஓட்டுநர்,தாளவாடி -638461

17 ஜூன் 2016

வாசிப்பை நேசிப்போம். கவிதை

வாசிப்பை நேசிப்போம்....

வீட்டிற்கு வெளிச்சம்
சாளரத்தின் ஊடே....
அறிவிற்கு வெளிச்சம்
வாசிக்கும் நூலே!!!!

வாசிக்காமல் யார்க்கும்
வளர்வதில்லை அறிவு...
இதனை நேசிக்காமல் போனால்..
வளர்ச்சிக்கே முறிவு!!!

பொது அறிவு பெற்றிடவே
எப்பொழுதும் நீ வாசி
அறிவுள்ள புத்தகங்கள்
அனைத்தையுமே நேசி!!!!

அடிமைகளின் சூரியனாம்
அபிரகாம் லிங்கனுமே
அமெரிக்க குடியரசு தலைவனென்று
ஆக்கி உயர்த்தியதும் புத்தகமே!!!

மாணவப் பருவத்திலே
பாட புத்தகங்களின் வாசிப்பு
சதத்தினையும் தொட வைக்கும்
வாசிப்பு சாதிக்க வழி வகுக்கும்!!!

ஊருலகம் யாவும் யாவும்
சுற்றி அறிய காலம் கொள்ளும்
புத்தகங்கள் அனைத்தும் விளக்கும்
கற்றறிய குறுகிய காலம் போதும்!!!

இருந்த இடத்தில் எல்லாம் அறிய
கையடக்க நூலே போதும்
கற்றறியும் வழக்கமிருந்தால்
சுடர் விடும் உன் அறிவெப்போதும்!!!

கற்பனை உலகிற்கே - நம்மை
இட்டுச் செல்லும் புத்தகங்கள்
மூளைக்கும் சிறகு முளைக்கும்
மூவுலகும் இட்டுச் செல்லும்!!!

நூலகங்கள் சென்று வர
நாளும் நீ தவறிடாதே
நுண்மதி பெருக்கி வைக்கும்
நூல் கற்க மறந்திடாதே!!!

புதுப்பித்துக் கொள்ள நீயும்
புத்தகம் வாசித்தே பழகு - உன்னை
புதுப்பிக்க புதுப்பிக்க
புறந்தள்ளாது இந்த உலகு!!!!

வாசிப்பை நாளும் நேசிப்பாய்
நல்ல நூலனைதுமே சுவாசிப்பாய்  
அறிவாளியாக்கும் உன்னை அறிவாய்
அனைவர் மதித்திட நீ உயர்வாய்!!!

12 ஜூன் 2016

மாணவர் நூலகம்-இலவசமா! அதெப்படிங்க சாத்தியமாகும்?

மரியாதைக்குரியவர்களே,
       அனைவருக்கும் இனிய வணக்கம்.தாளவாடி வட்டத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களிலிருந்து பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஒழுக்கமும்,சிந்தனையும்,பொது அறிவும்,தன்னம்பிக்கையும்,மேலோங்கச்செய்யும் விதமாக நாம் நம்ம தாளவாடிவட்டத்தில் ''மாணவர்கள் இலவச நூலகம்'' வருகிற 2016ஜூலை மாதம் 15ந் தேதி துவக்கி செயல்படுத்த உள்ளோம்.அதுவும் மாணவர்களின் இருப்பிடம் சென்று புத்தகங்களை வழங்க உள்ளோம்சுழற்சிமுறையில் இலவசமாக!>.......... அதற்கான முயற்சியின் முதல்படியாக இன்று ஃபேஸ்புக் தளத்தில் மாணவர் நூலகம் என்ற புதிய குழுவினை துவக்கி ஆர்வமுள்ள நெருக்கமான நண்பர்களை உறுப்பினர்களாக இணைத்து பகிர்ந்து இருந்தேன்.உடனே இன்னுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக முதல் ஆதரவு கொடுத்த  தன்னார்வலர் திரு கருப்புசாமி READ எனப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

           சான்றோர்களே,
                மாணவர் நூலகம் துவக்க இருப்பதாக ஆதரவு மற்றும் நல்லதொரு ஆலோசனை கேட்டு  ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்தவுடன் நண்பர் ஒருவர் கேட்ட வினாவும் எனது பதிலுரையும் 
        தங்களது மேலான பார்வைக்காக இதோ..........
   
 மாணவர் நூலகம் இலவசமா? அதெப்படிங்க நடத்துவது?அதற்கான மூலதனம் சேகரிப்பது எப்படி?இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?என்றெல்லாம் தொடர்பில் கேட்டார்.எனக்கு சிந்தனையைத்தூண்டிவிட்ட அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்.அதே நேரத்தில் எனது பதில் மாணவர் நூலகத்தினை அதுவும் சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்த அனுபவம் ஒன்றே போதுமானதுங்க.செயல்பாட்டில் தெரிந்துகொள்ளுங்க..மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் எழுச்சிமிகு மாறுபாட்டினை விரைவில் காண்பீர்கள்..
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை. 
paramesdriver@gmail.com 9585600733

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...