09 செப்டம்பர் 2015

செல்போன் மேலாண்மை.அதாவது .மொபைல் போன் மேலாண்மை

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். செல்போன் மேலாண்மை பற்றி அறிந்துகொள்வோம்.சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்போம்.
செல்போன் எனப்படும் அலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்.

               செல்போன் எனப்படும் அலைபேசிகள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய பயன்பாட்டுப்பொருளாகி விட்டது. அதே சமயம் மின்னணு சாதனமான செல்போன் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.இருந்தாலும் செல்போன் கதிர்வீச்சில் இருந்து முழுவதுமாக தப்பிக்க முடியாது.
                    ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நமக்கு பாதிப்பை கொடுக்கவே செய்யும். சிட்டுக்குருவிகள் கூட இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
                 இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு அதன்படி செல்போனை மேலாண்மை செய்வது  நமது குடும்பம் உட்பட நமக்கும்  நமது சந்ததியினருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
                          இந்த அலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

                 ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் அலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே  நாம் அலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
             1. முடிந்த அளவு அலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் அலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைப்பேசிகளால் கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம்.
           2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
         3. குழந்தைகளிடம் மொபைல் போனை பயன்படுத்தவோ, பேசுவதற்கோ, கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
         4. உங்கள் அலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
          5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைப்பேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் போது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
        6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
          7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பில் இணைந்த பிறகு  போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதிர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
            8. கைப்பேசிகளில் பேசும் பொழுது வலது புறக் காதில் வைத்து பேசாமல் இடது புறக் காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
            9. அலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்கள் சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
          10. அலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
          11. அலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
           12. அலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...