13 ஆகஸ்ட் 2015

ஆங்கிலேய அரசின் திட்டமிட்ட சதி?..நமது விடுதலை!..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
            ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினமாக அறிவிக்கப் பட்டது ஏன் ? ஆங்கில அரசின் திட்டமிட்ட சதி !
                        ஆங்கில அரசு,இரண்டாம் உலகப்போரின்போது தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பான், போரில் தான் ‘சரணடைவதாக’ அறிவித்த தினம் 1945ஆகஸ்ட் 15 ந் தேதியை  இந்தியாவின் சுதந்திர தினமாக அறிவிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தது.

              ஆகஸ்ட் 15 என்ற இந்த தினம், இந்தியாவின் சுதந்திர தினமாக எதேச்சையாகவோ, அல்லது நம் விடுதலை போராளிகளின் நிர்பந்தத்தாலோ ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.  
               
                    குள்ள நரியின் தந்திரத்தோடு தான் இந்தியாவின் சுதந்திர தினமாக ஆகஸ்டு15 ந் தேதியை  ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டது.

            இன்றைய நவீன உலகின் மாபெரும் யுத்த ஆயுதமாக திகழும் ‘அணு ஆயுதத்தால் இரண்டாம் உலகப்போரின்போது தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பான், போரில் தான் ‘சரணடைவதாக’ அறிவித்த தினம் 1945ஆகஸ்ட் 15.

         இந்த தினத்தை வரலாற்றில் எப்போதும் நிலைநிறுத்திவிட வேண்டும் என்று விரும்பிய ஆங்கிலேயர்கள் மிக புத்திசாலித்தனமாக இந்தியாவிற்கான சுதந்திர தினமாக அதனை தேர்ந்தெடுத்தனர்..

            அதுமட்டுமின்றி ஜப்பானியர்களை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடனும், இந்திய-ஜப்பானியர்களிடையே சுமூகமான நல் உறவு எக்காலத்திலும் இருக்ககூடாது என்ற எண்ணத்தினாலும் தான் இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
                . அது ஏன் என்கிறீர்களா? அதற்கு காரணம் சுபாஸ் சந்திர போஸும், அவரது( INAபடை ) இந்திய தேசிய ராணுவ படையும்தான்.

             காந்திஜியின் அகிம்சா வழியில் சுதந்திரத்தை பெற்றுவிட முடியாது என்று நம்பிய சுபாஷ்,
               இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்த ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் நினைத்தால் அல்லது ஆதரித்தால் இந்தியாவின் அடிமை சங்கிலியை உடைத்துவிடலாம் என்று நம்பினார். ‘இந்திய விடுதலைக்கு உதவி’ என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜெர்மனும், இத்தாலியும், பின் வாங்கிக்கொள்ள, 

        ஜப்பான் அரசு இந்திய விடுதலையை ஆதரித்தது அதோடு தேவையான உதவியும் அளிப்பதாக உறுதியளித்தது.

         தொடர்ந்து இந்திய விடுதலைக்காக, 1942ம் ஆண்டு, ‘ராஷ் பிகாரி போஸ்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு பின்பு போதிய ஆதரவின்றி கலைக்கப்பட்ட ‘இந்திய தேசிய ராணுவம்’ 1943ஆம் ஆண்டு சுபாஸ் சந்திர போஸால் புத்துயிர் ஊட்டப்பட்டு, 43,000க்கும் அதிகமான வீரர்கள் கொண்ட பெரும்படையாக ‘இந்திய தேசிய ராணுவம்’ உருவாக எல்லாவிதத்திலும் ஆதரவாக ஜப்பான் உதவிபுரிந்தது.  
                'ஜான்சிராணி படை'  என்ற பெயரில்  பெண்களுக்கென்றே தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டு அதற்கு லட்சுமி சாமிநாதன் என்ற சென்னை தமிழ்ப்பெண் தலைமையில் 1500 வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சேவை புரிந்தனர்.

             இதன் காரணமாக எரிச்சலுற்ற ஆங்கிலேயர்கள், போரின் முடிவில் அணு ஆயுதத்தால் வீழ்த்தப்பட்டு ஜப்பான் தான் சரண்டைவதாக அறிவித்த ஆகஸ்ட் 15 ந் தேதியை ஜப்பானியர் தங்களது துக்கநாளாக அனுசரிக்கும்போது அதே ஆகஸ்ட் 15,ந் தேதியை  இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ‘சாடிஸ்ட்’ எண்ணத்துடன் ஆகஸ்ட் 15ம் தேதியை இந்தியாவின் சுதந்திர நாளாக அறிவித்தது.

           இதற்கான காரணத்தை நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான், இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
சுதந்திரத்திற்கு வித்திட்ட இந்தியர்களில் பெரும் பங்கு தமிழர்களுக்கு உண்டு.என்னறிவுக்கு எட்டியவகையில்142 தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர்.

உதவிய  ஃபேஸ்புக் நண்பர்
 திரு.அருண்குமார் அவர்களுக்கு
 நன்றிங்க. 
 என அன்பன் 
C.பரமேஸ்வரன்.
 சத்தியமங்கலம்,
 ஈரோடு மாவட்டம்.
     



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...