09 ஜூலை 2015

இந்தியா அடிமை நாடா?

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். கி.பி.1835ல் வளமிக்க இந்திய திருநாட்டின் பெருமையும் இன்றைய ?????????????????????

   லார்டு மெக்காலே ஆற்றிய உரை
                                   1835 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 - ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது:
" நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன். 


            எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் காணவில்லை! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் நாடு! உயர்ந்த பண்புநலன்கள் கொண்ட நாடு! சிறந்த மனநலமும், குணநலமும் கொண்ட மக்கள். இவ்வளவு சிறப்பான நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை. அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால், நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள, இந்தியர்கள் காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும், பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும்.

             அதற்காகத்தான்  இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன். இந்தியர்கள் தங்களது நாட்டையும், தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும், ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் இந்தியர்கள் தங்கள் கௌரவத்தையும் சொந்த கலாச்சாரம், பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள். பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். அடிமைகளாகிவிடுவார்கள். 
    இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடு ஆகும்"

               திருடர்களும் பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியத் திருநாடு என்பது 1835 - ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில்
பதிவு செய்யப்பட்ட உண்மை. இது வரலாறு. 


          இந்த உரை நிகழ்த்தப்பட்ட 180 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் நிலை எவ்வளவு நலிவுற்று
நாசமாகிப் போய்விட்டது? நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு நாடாளுமன்றத்திலும்
சட்டப் பேரவைகளிலும் உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்களில் பல பேர் கொடிய குற்றவாளிகள் என்பது தேர்தல் ஆணையப் புள்ளி விவரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...