20 பிப்ரவரி 2015



இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்
இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை. இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர்.
இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை .
இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப் பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...