30 ஜனவரி 2015

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE-சாலை பாதுகாப்பு வாசகம் மட்டுமல்ல,அது வாழ்க்கை முறை.


மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,சத்தி உட்கோட்ட காவல்துறை போக்குவரத்துக் காவல் நிலையம்,லோகு டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம் ஆகிய துறைகளுடன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி கொடுக்க உள்ளோம்.மேலும் விவரங்கள் அறிய.....http://consumerandroad.blogspot.com வலைப்பக்கத்தை காண அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றிங்க.








26 ஜனவரி 2015

மாரடைப்பா?மிளகாய்பொடி பயன்படுத்துங்க!!.......

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
                 மாரடைப்புக்கு ஒரு மருந்து!..

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து
இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்றுவிடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில் மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
எவ்வாறு செய்வது:
ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.
இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார்.
எவ்வாறு வேலை செய்கிறது:
காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்.
மொழியாக்கம்:
இயற்கை செய்திகளிலிருந்து.

 நன்றிங்க Abdul Farookஅகரம் உகரம் சித்த மருத்துவம்

பேஸ்புக் நண்பர்கள் தொல்லை தாங்க முடியவில்லைங்களா?.....

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.
  
தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த
By vayal on 23/01/2015

பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள். இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம். இதனால் எரிச்சல் அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பதிவுகளை நிறுத்த முடியாமல் தவிப்போம்.
பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது. இந்தப் பிரிவில், உங்களுடைய செய்திப் பதிவு பக்கத்தில், கடந்த வாரத்தில் அதிகம் பதிவுகளைத் தந்த நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்படும். இதில் யாரிடமிருந்து இத்தகைய பதிவுகளை நிறுத்த வேண்டுமோ, அவர்கள் பெயர் முன் ஒரு டிக் கிளிக் செய்து, அவர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்து செய்திப் பதிவுகளை இடுவதனை நிறுத்தலாம். இதனை நிறுத்திய பின்னரும், அவர்களுடன் தொடர்ந்து நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நம்மை எரிச்சலடையச் செய்திடும் பதிவுகள், நிலைப்பாடுகள் நமக்கு வராது.
இதே பட்டியலில், கடந்த காலத்தில் நம்மைப் பின்பற்றி பதிவுகள் இடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் காணலாம். நீங்கள் முடிவெடுக்கும் எந்த நேரத்திலும், இவர்களுக்கு உங்களைப் பின்பற்ற அனுமதி அளிக்கலாம்.
இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது. இதனைப் பெற "more" மெனு கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில், கீழாகச் செல்லவும். அங்கு "help & settings" என்ற பிரிவில், நீங்கள் இந்த வசதியினைப் பெறலாம்.
இதற்கிடையே, இன்னொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட விரும்பத்தகாத நபரிடமிருந்து வரும் தகவல்களை மறைத்து வைக்கலாம். அந்த பதிவில், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், hide என்பதை அழுத்தி, தகவலை மறைக்கலாம். இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் தகவல் பதிவுகள் மறைக்கப்படும் மற்றும் குறைக்கப்படும்.
“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று இது குறித்து பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் (http://newsroom.fb.com/…/news-feed-fyi-more-ways-to-contro…/) தெரிவித்துள்ளார். இந்த செட்டிங்ஸ் இயக்குவது பற்றிய காணொளி விளக்கக் காட்சியையும் காணலாம்.
அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் தளமும் இந்த வசதியைத் தந்துள்ளது.

வாக்காளர் தினம் ஜனவரி-25 ஆம் தேதி..

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
       ஜனநாயகம் காப்போம்
By வை. இராமச்சந்திரன் - Dinamani
First Published : 24 January 2015 03:02 AM IST
வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு, அந்த நாளில் தேர்தல் ஆணையம் சார்பில் புதிய வாக்காளர்களுக்கு அந்தந்தப் பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்களும், தங்களுக்கு இரண்டு இடங்களில் பெயர் பதிவு உள்ளவர்கள் தங்களது முந்தைய முகவரியில் உள்ள பதிவை நீக்கம் செய்யவும் அன்று விண்ணப்பிக்கலாம்.
18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே வாக்குரிமை, வாக்காளர் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வாக்காளர் தினத்தையொட்டி ஆங்காங்கே விழிப்புணர்வுப் பேரணிகளும், மனிதச் சங்கிலி, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.
தேர்தல் ஆணையமும் தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால், அண்மைக்காலமாக வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, தேர்தலின்போது வாக்குப் பதிவும் அதிகரித்து வருகிறது.
வாக்காளர்களாகிய நாம் வாக்கின் முக்கியத்துவத்தை எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம்? அதுபற்றிச் சிந்திக்கும் நாளாகவே இந்த தினத்தைக் கருத வேண்டியுள்ளது.
ஒரு வாக்காளனின் கடமை என்ன என்பதும், வாக்கின் முக்கியத்துவம் என்ன என்பதும், விலை மதிப்பற்ற வாக்கை பணத்துக்கு விற்பது தவறு என்பதும் வாக்காளர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட வாக்காளரிடம் "நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்' என்று கேட்டால், அவர் குறிப்பிட்ட ஒரு கட்சியைக் கூறி "அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன். எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அந்தக் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறது' என்று கூறுவார்.
குடும்பத் தலைவர் சொல்வதைக் கேட்டு வாக்களிப்பது; வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனையின்போது சொல்வதைக் கேட்டு வாக்களிப்பது; பணம், பரிசுப் பொருள்கள் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது; மதுவுக்கும், பிரியாணிக்கும்கூட அடிமையாகி வாக்களிப்பது இப்படி வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர்.
தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் கொள்கைகளை ஆராயாமல், தகுதியான வேட்பாளர்தானா என்று பார்க்காமல், தங்கள் வாக்கின் வலிமையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்திவிட்டு வந்தால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் வேதனையளிக்கிறது.
படித்த, நடுத்தர வர்க்கத்தினர் எப்போதுமே வாக்களிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.
வாக்குரிமை ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதனைக் கட்டாயமாக்க முடியாது. ஏனெனில், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, அதேபோன்று வாக்களிக்காமல் இருப்பதும் அவரின் உரிமையே.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு படித்தவர்களிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், பாமரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிக்கையுடன் வாக்களித்தாலும் அவர்களது நிலை இன்னும் உயர்ந்தபாடில்லை.
தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களை குறை கூறுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆட்சியாளர்கள் தவறான பாதைக்கு செல்ல காரணமே, வாக்காளர்கள் சரியான முறையில் வாக்குகளைப் பதிவு செய்யாததும், வாக்குப் பதிவை தவிர்ப்பதுமே ஆகும்.
வாக்கின் வலிமையை ஒவ்வொரு வாக்காளரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு முன்புவரை நரேந்திர மோடிக்கு விசா வழங்க மாட்டோம் என அமெரிக்க அரசு அடம் பிடித்தது.
ஆனால், அவருக்கு இந்திய மக்கள் அளித்த வாக்குகள், அதே அமெரிக்க அரசை அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கச் செய்திருக்கிறது.
ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கேஜரிவாலை தில்லி முதல்வராகும் அளவுக்கு உயர்த்தியது மக்கள் அவருக்கு அளித்த வாக்குகளே.
அண்டை நாடான பாகிஸ்தானில், ராணுவப் புரட்சியின் போது நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப், தற்போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி அமைக்க உதவியது அந்நாட்டு மக்களின் வாக்குகள்தான்.
தனக்காக சட்டத்தையே மாற்றி அமைத்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவருக்கு எதிராகப் பதிவான வாக்குகளால் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு கிடைத்த அதிக வாக்குகளால் அவர் அதிபராகியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மூலம் வாக்குகளின் வலிமையைப்பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை கண்டிப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சியில் இருந்து மக்களவைத் தேர்தல் வரை எந்தத் தேர்தலையும் புறக்கணிக்காமல் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
எந்த நிலையிலும் இலவசங்கள் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் உரிமை நமக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.
வாக்களிப்பது நமது உரிமை; நமது கடமை. வாக்குச் சீட்டை விற்கமாட்டோம். ஜனநாயகம் காப்போம். சாதி, மத, இனப் பாகுபாடு கடந்து மக்களாட்சி தத்துவத்தை நிலை நிறுத்த ஒன்றுபடுவோம். பணநாயகம் நீங்கி ஜனநாயகம் தழைக்கட்டும் என ஒவ்வொரு வாக்காளரும் இந்த வாக்காளர் தினத்தில் சூளுரைப்போம்!

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் .
நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே  கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com. B.L அவர்களின் புத்தககங்கள் எளிமையாக உள்ளது.

தேவையான புத்தகங்கள்.
1. இந்திய தண்டனைச் சட்டம் 
2. குற்ற விசாரணை முறைச் சட்டம்
3. இந்திய சாட்சிய சட்டம்
4. இந்திய அரசியல் சாசனம்
5. தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005.
6. உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்.
.
சட்டப் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அனைத்து சட்டங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எது பற்றிய சட்டம் தேவையோ ? அதை மட்டும் படியுங்கள்.   மற்றவர்களுக்கு சட்டம் சொல்லிக் கொடுங்கள். உங்கள் திறமை வளரும். வக்கீல்களை நம்பி ஏமாறாதீர்கள். பாதிக்கப்பட்டோர் கழகத்தில் சேருங்கள்.
திரு.சுப்ரமணியம் பெருமாள் அவர்களுக்கு நன்றிங்க.

திருமண முறிவு என்னும் விவாக ரத்து?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
           ‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும்.
ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.
பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.
சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில்,
திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,
1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
... மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும்
மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.
இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.
இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துவிட்டு முடிவெடுங்கள்!
நன்றி,திரு.செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு..

சீனப் பெருஞ்சுவர்.............

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
         சீனப் பெருஞ்சுவர்..
 உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சீனப் பெருஞ்சுவராகும். பண்டைய சீன அரசர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக வலிமையான கோட்டை-களையும், சுற்றுச்சுவர்களையும் எழுப்பினர் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதே சீனப் பெருஞ்சுவர் என்று கூறப்படுகிறது.
சீனாவின் வடபுலத்தில் உள்ள மங்கோலியா என்னும் நாட்டிலிருந்து நாகரிகம் இல்லாத நாடோடிகள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ஷயுவால்டீ என்ற மன்னன் இந்த நீண்ட சுவரை எழுப்பியதாகக் குறிப்பு உள்ளது.
இதன் நீளம் 5,500 மைல்கள். உயரமான சிறுசிறு கண்காணிப்புக் கோபுரங்கள் ஆங்காங்கே அதிக அளவில் காணப்படுகின்றன. சுவரின் அடிப்பகுதி அகலம் 8 மீட்டர். மேற்பகுதி அகலம் 5 மீட்டர். சுவரின் இடையில் மண், செங்கல், கருங்கல் நிரப்பிப் பாதைபோல் செய்துள்ளனர். சுவரின் மேலுள்ள இருப்புப் பாதை, குதிரை வீரர்கள் செல்ல ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரச வம்சங்களின் ஆட்சியின்கீழ் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் உள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஷி ஹுவாங் லீ என்ற மன்னன் (கி.மு. 221) தனித்தனியாக இருந்த சுவர்களை ஒன்றாக இணைத்தான். இவன் சின் வமிசத்தைச் சேர்ந்தவன். கி.மு. 246 இல் சீனா பல்வேறு மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. அரசர் ஷ ஹவாங் லீ ஒன்றாக இணைத்துப் பேரரசாக்கியுள்ளார். இரு சுவர்களுக்குமிடையே படிக்கட்டுகள் உள்ளன. இச்சுவரின் பல பகுதிகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. சூய் மரபுக் காலத்தில் (கி.பி. 589 _ 618) நீளம் மேலும் விரிவுபடுத்தப்-பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம் மிங்க் வம்ச காலத்தில் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்புகள் காணப்-படுகின்றன.
இச்சுவரை எழுப்புவதற்கு, நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இரவு பகல் பார்க்காது வேலை பார்த்துள்ளனர். சீனப் பெருஞ்சுவரில் இரு உருவப் பாறைகள் காணப்படுகின்றன. இதற்கு, செவிவழிக் கதை ஒன்று உள்ளது.
சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய பணியாளர்களுள் மீங்ஜியாங் என்ற பெண்ணின் கணவனும் ஒருவன். வேலைக்குச் சென்ற அவன், பல ஆண்டுகளாகியும் வீட்டிற்கு வரவில்லை. கவலையுற்ற மனைவி, கணவன் வேலை செய்யும் இடத்திற்குத் தேடி வருகிறாள். வேலையாள்கள் நிறையப்பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கணவனை உடனடியாகக் காணமுடியாமல் தவிக்கிறாள். காத்திருந்து கணவனைப் பார்க்கிறாள். அப்போது, வேலை நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு பாறாங்கல் உருண்டு, அவனது தலையில் விழுகிறது. கணவரின் உயிர் உடலைவிட்டுப் பிரிகிறது. மனம் தாங்காத மனைவியும் அதே பாறையில் மோதி மோதி அழுது, தலையில் அடிபட்டு உயிர் துறக்கிறாள். இந்தத் தம்பதியரின் உருவம்தான் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது என்று மக்களால் வழிவழியாக நம்பப்பட்டு வருகிறது.
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்த வீரர்கள் கடல், மலை என்ற இயற்கை வளங்களுடன், செயற்கையாக மனிதனால் உண்டாக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை மட்டுமே பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக சுவரின் தேவைப்படும் பகுதிகள் அவ்வப்போது இடிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நெடுஞ்சுவரைப் பார்ப்பதற்கு, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆர்வத்துடன் வருபவர்கள் சுவரின் நீளம் முழுமையையும் பார்த்துவிட முடியுமா என்றால் முடியாது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இப்போது கம்பி ரயில் (கேபிள் கார்) வசதி அமைக்கப்பட்டுள்ளது. விண்பௌதியான் என்பவர் 2 ஆண்டுகள் சுவர் மீது நடந்து முழு நீளத்தையும் கடந்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பற்றிய தகவல் இதோ........

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்?
மாற்றுத் திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர். அதன்படி கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம், புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்), பல்வகை ஊனம், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் என 8 வகையாக மாற்றுத் திறனாளிகள் பிரிக்கப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடுவதற்கு உடல் குறைபாட்டில் அளவு ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம். உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகையில் இட ஒதுக்கீடு உண்டா?
அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காண்பதற்கு யாரிடம் சான்றிதழ் பெறவேண்டும்?
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 4 வகை மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தால் அளிக்கப்படும் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவிடமிருந்து மாற்றுத் திறனுக்கான சான்றிதழ் பெறுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் யார்?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் யார்?
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்,
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392 / 2829 0409
     
1) கல்வி உதவித் தொகை:
********************************************
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்
9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்
இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்
முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்

2) வங்கிக் கடன் உதவி
***********************************
வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை
குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும்
**************************************************************************************** மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்
*********************************************************************************************
அளிக்கப்படும் பணம் எவ்வளவு?
ரொக்கத் தொகை 25,000.
டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய், மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.
பேசும் திறன் அற்ற காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
வயதுச் சான்று
திருமணப் பத்திரிகை மற்றும் சான்று
குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான
**************************************************
மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை
************************************************************
மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
******************************************************************************************
பார்வையற்றோர் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம், கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
மூன்று புகைப்படங்கள்
கல்வி, தொழிற்கல்வி நிலையம் (அ) பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
மார்ச் மாதம் முதல்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரு மாதத்திற்குள்.

6)தேசிய அடையாள அட்டை
*******************************************
தேசிய அடையாள அட்டை பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர், மாற்றுத் திறனுடையோர் எனச் சான்று அளிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி
***************************************
சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.
அ) மூன்று சக்கர வண்டி
ஆ) சக்கர நாற்காலி
இ) காதொலிக் கருவி
ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்
உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி
ஊ) காலிப்பர்
எ) கைதாங்கி ஊன்றுகோல்
ஏ) செயற்கைக் கால்
ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
சிறப்பு மருத்துவச் சான்று
வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.

மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...
***********************************************************

பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத் திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள், அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.
உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை. நிரந்தரமானது.
இந்திய ரயில்வேயில் முழுமையான பார்வையற்றவர்களும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் 50 சதவிகிதம் கட்டணத்தில் பயணம் செய்யலாம். முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.
இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.
கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கே முன்னுரிமை. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோமீட்டர் வரை இலவசப் பேருந்துப் பயணம்
என்ன மாதிரி ஊனம் உள்ளதோ, அந்தப் பிரிவு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட 3 நபர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கூடத்திலேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். வேறு ஏதும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.
2) விற்பனை, வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்க, விவசாயப் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் கடன் உதவி.
3) மன்நலம் பாதிக்கப்பட்டவர்கள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை, பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.

நிபந்தனைகள்:
1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக் இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.

வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.

திருப்பிச்செலுத்தும் காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).

கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழக முகவரி: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, சென்னை-600001. போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.

3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய: முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-600078. போன்: 044-24719948, 044-24719949
நன்றி= திரு;செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு..

திருப்பதி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.
 
            திருப்பதி தேவஸ்தானம் பற்றிய அரிய தகவல்கள்!
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
.
* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடை  கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.}

நன்றி;மாலை முரசு..

நீங்கதாங்க அதிர்ஷ்டசாலி!

மரியாதைக்குரியவர்களே,
                                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
           நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?
* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.
* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.
* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.
* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.
* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.
*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).
* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே...!!

நன்றி- மாலைமுரசு 

ஆதார் அட்டை பற்றி சந்தேகமா?கவலைப்படாதீங்க......இதோ......

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.ஆதார் அட்டை பற்றிய சந்தேகங்களுக்கான பதிவு இது......படித்து பயனடையுங்க...முகநூல் நண்பர் திரு.செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிங்க...
          
1.ஆதார் அட்டை உங்களுக்கு இல்லை. அதனை நீங்கள் பதிவு செய்வது எப்படி? என்று தெரிய விரும்புகிறீர்களா!...நீங்கள்
இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,
Directorate of Cencus Operations, Tamilnadu,
E-Wing, Third Floor, Rajaji Bhavan,
Besant nagar,
Chennai-600 090,
Phone:91-44-24912993.
Mail: dco-tam.rgi@nic.in
******************************************************************************************
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கவில்லையா?அதன் விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ......

* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
* https://resident.uidai.net.in/check-aadhaar-status இணைய தளத்தில் பெறலாம்.
*******************************************************************************************
3.  ஆதார் அட்டையைத் தொலைத்துவிட்டீரா? மீண்டும்  ஆதார் அட்டை வேண்டுமா? 

http://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
*********************************************************************************************
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?

ஆதார் இணையதளமான https://resident.uidai.net.in உள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
**********************************************************************************************5. 5.ஆதார் அட்டையில் உங்களுடைய விவரங்களை திருத்தம் செய்ய வேண்டுமா?அதாவது புதுப்பிப்பது (Updation) எப்படி?என்கிறீர்களா..........

பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,
* இணையதளமான https://resident.uidai.net.in உள்ளே சென்று செய்யலாம்.
*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கண்ட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:
UIDAI,
Post box No.:10,
Chhindwara,
Mathya Pradesh-480 001,
INDIA .

அல்லது
UIDAI
Post Box No:99
Banjara Hills,
Hyderabad - 500 034,
INDIA.
மறந்துவிடாதீர்.தாங்கள் அனுப்பும் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்..


Selvam Palanisamy
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
              இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

22 ஜனவரி 2015

பெண்களே எச்சரிக்கை!.....

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
பெண்களே உஷார் .....
ROHYPNOL மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்...
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம்கேட்கும் நிலைக்கு வந்து விடுவர்.... இந்த மயக்கம் 11 மணி முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கும்...
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது> மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம்
அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..
இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது இதற்கு மேல் என்ன செய்ய இயலும்??
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது? எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்! மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்..

என்றும் மக்கள் நலப்பணியில்.....
pass tis msg to ur mom,sis n ladies..

ரீஃபைண்டு ஆயில்.பயன்படுத்தாதீங்க!!!.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.ரீபைண்டு ஆயில் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க.......
 ரீபைண்ட் ஆயில் மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )
எனவே ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்கலாமா?
           .  ரீபைண்ட் ஆயில் என்றாலே சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் என்றுதான் நினைத்து வருகிறோம்.ஆனால் ரீபைண்டு ஆயில் சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத சக்கை எண்ணெய் ஆகும்.
ரீபைண்ட் ஆயில் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்க!......
            மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதற்காக பெரிய தொகைகளை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள்  மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில். யோசிச்சு பாருங்க இவ்வளவு கெடுதலான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி,நாமே விலை கொடுத்து நம் ஆரோக்கியத்தை  பாழ்படுத்திக் கொள்கிறோம்.
அப்படி என்றால் எந்த எண்ணெய் தான் வாங்குவது? 
               ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதைத் தானே நம்ம முன்னோர்கள் பயன்படுத்தினாங்க.
   கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா மாரடைப்பு,இரத்தக்கொதிப்பு வரும்,அதிக எடை கூடும் என சொல்லுவாங்களே! என நினைக்கிறீர்களா?
கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
               எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
            ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம் என்று பார்க்காதீங்க! டாக்டருக்கு செலவு செய்வதையும் பாருங்க!அதனால் விலைக்கேற்றபடி குறைத்து பயன்படுத்துங்க
  நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ? நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.
தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்பார்கள்.

21 ஜனவரி 2015

தமிழே! உயிரே!!

மரியாதைக்குரியவர்களே, 
                                வணக்கம். வளமை மிக்க சொற் பெருக்கம் கொண்ட தமிழின் பெருமை இதோ.....

நம்ம மொழி செம்மொழி.
‪#‎அம்மா‬ மூன்றெழுத்து ‪#‎அப்பா‬ மூன்றெழுத்து ‪#‎தம்பி‬ மூன்றெழுத்து
‪#‎அக்கா‬ மூன்றெழுத்து
‪#‎தங்கை‬ மூன்றெழுத்து
‪#‎மகன்‬ மூன்றெழுத்து
‪#‎மகள்‬ மூன்றெழுத்து
‪#‎காதலி‬ மூன்றெழுத்து
‪#‎மனைவி‬ மூன்றெழுத்து
‪#‎தாத்தா‬ மூன்றெழுத்து
‪#‎பாட்டி‬ மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
‪#‎உறவு‬ மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
‪#‎அன்பு‬ மூன்றெழுத்து
அன்பில் வழியும்
‪#‎காதல்‬ மூன்றெழுத்து
காதலில் வரும்
‪#‎வெற்றி‬ மூன்றெழுத்து
‪#‎தோல்வி‬ யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
‪#‎வேதனை‬ மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
‪#‎சாதல்‬ மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
‪#‎உயிர்‬ மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
‪#‎கவிதை‬ என்றால் மூன்றெழுத்து..
இது
‪#‎அருமை‬ என்றால் அதுவும்
மூன்றெழுத்து
‪#‎மொக்கை‬ என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
‪#‎நட்பு‬ என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
‪#‎நன்றி‬ ..
#நன்றி யும் மூன்றெழுத்தே ...!
‪#‎மூன்று‬ ம்
மூன்றெழுத்தே........!!!
‪#‎இவை‬ அத்தனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!!


வாழ்விற்கு!!!வழிகாட்டும் சில தகவல்கள்,,,,
**********************************************

1. ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்.
மீனவன் சாப்பிட வேண்டாமா?’
*******************************************************
2. உலகம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நாம்தான் ஒருவருக்கொருவர் கவலைப்பட்டுக் கொள்கிறோம்!

***************************************************************************************
3. தோல்விகள் நல்ல பாடங்களை தருபவை -- படிப்போம் ..
வெற்றிகள் கண்ணாடி போன்றவை --- பாதுகாப்போம் ...
நல்ல உறவுகளும் நல்ல நட்பும் விலை மதிப்பற்றவை - தக்க வைத்து கொள்வோம் .
****************************************************************************

நம் வாழ்வில் அறிந்து வைத்திருக்க வேண்டிய முத்தான முன் எச்சரிக்கையான செய்திகள்.
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥
1. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8.பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
தமிழுக்கு நன்றிகள் ,,,,

இந்து வாரிசுரிமைச் சட்டம்..

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். இந்து வாரிசுரிமைச்சட்டம் பற்றி காண்போம். பதிவிட்ட வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றிங்க!.
       
இந்து வாரிசுரிமைச் சட்டம்
இந்து வாரிசுகளின் சொத்துரிமை
இந்திய சுதந்திரத்துக்கு முன், பழைய இந்து சட்டமே இருந்தது. அதன்படி, ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வாங்கினால், அவருக்கு ஒரு மகன் பிறந்தவுடன் அவனும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவான். அந்த மகனுக்கு ஒரு மகன் (அதாவது பேரன்) பிறந்துவிட்டால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அதாவது சொத்தை வாங்கியவர் உட்பட மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகளும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவர். இதுதான் பழைய இந்து சட்டத்தின் சிறப்பு. அதனால்தான், 'தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்குண்டு' என்ற பழமொழியும் வந்தது. எப்போதுமே இந்த நான்கு தலைமுறையும் அடுத்தடுத்து தொடரும். இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர் (Hindu Coparcenary property).பொதுவாக அதை பூர்வீகச் சொத்து என்று சொல்வோம். இந்த மாதிரியான ஆண்வழிச் சொத்துக்களை மட்டும்தான் பூர்வீகச் சொத்துக்கள் என்று அர்த்தத்தில் குறிப்பிடுவர். (பெண்வழிச் சொத்துக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லை. அதாவது அம்மாவின் அப்பாவான, நம் தாத்தா வழியில் கிடைத்த சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் இல்லை.)
1956ல் புதுச்சட்டம்
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (The Hindu Successi
on Act 1956) கொண்டுவரப்பட்டு பெருத்த மாற்றம் செய்யப்பட்டது. இது 17.6.1956 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 1956க்கு பின் ஒருவர் ஒரு சொத்தை வாங்கினால், அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ, கொள்ளுப்பேரனுக்கோ, பங்கு கிடையாது. அவனும், அவன் பிறந்தவுடன் பங்குதாரர் ஆகமுடியாது. அந்த சொத்தை வாங்கியவரின் தனிச் சொத்தாகவே (Separate property or self acquired property)கருதப்படும். அவ்வாறு சொத்தை வாங்கியவர் இறந்தபின்னர், அவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள், இவர்களுக்கு மட்டுமே அந்த சொத்தை சரிசமமாக வாரிசு என்ற முறையில் கிடைக்கும். இறந்தவரின் தகப்பனாருக்கு ஒரு பங்கும் கிடைக்காது. (ஒருசில தாசில்தார்கள், தவறுதலாக, இறந்தவருக்கு அவரின் தகப்பனாரும் ஒரு வாரிசு என்று வாரிசு சான்றிதழ் வழங்குகிறார்கள்; இது சட்டப்படி தவறு). இறந்தவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள் என்று யாருமே இல்லை என்றால்தான், இறந்தவரின் தகப்பனார் ஒரே வாரிசாக வருவார். அவரும் இல்லையென்றால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது உயிருடன் இருக்கும் சகோதர, சகோதரிகள் மட்டும்) வாரிசாக சொத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படியும் யாரும் இல்லை என்றால், அந்த இறந்த சகோதர, சகோதரிகளின் வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியாக முதல்வாரிசுகள், 2ம் வாரிசுகள் என்று பல வகையுண்டு.

முதல் வாரிசுகள்: (Class-I Heirs)
Mother, wife, son, daughter (any children of the pre-deceased son or daughter)
இரண்டாம் வாரிசுகள் (Class-II Heirs)
First - Father
If no father is alive- then Brothers, Sisters,
If no brothers or sisters are alive, then to their children.
புதுச்சட்டத்தில் பூர்வீகச் சொத்து
ஆனால் 17.6.1956க்கு முன் ஒரு இந்து, அவர் கிரயம் வாங்கிய சொத்தையோ, அல்லது அவரின் தகப்பனார், பாட்டனார் கிரயம் வாங்கிய சொத்தையோ, விட்டுவிட்டு இறந்திருந்தால் அது பூர்வீகச் சொத்தாகக் கருதப் பட்டு, பழைய இந்துச் சட்டப்படி சொத்தை ஆண்வாரிசுகள் பங்கிட்டுக் கொண்டு, இறந்தவருக்கு அதில் கிடைக்கும் பங்கில் அவரின் மகன்களும், மகள்களும், மனைவியும் ஒரு சிறு பங்கை அடைவார்கள். இந்த முறைப்படி மகள்களுக்கு ஒரு சிறு பங்கே கிடைத்தது. ஆண்களைப் போன்று பெண்களுக்கு சம பங்கு கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு 1989ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதன்படி திருமணம் ஆன பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்க சட்டம் கொண்டுவந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம்
2005ல் மத்திய அரசு ஒரு பெரிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்து, அதன்படி திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாமல் இருந்தாலும், பெண்களுக்கும், ஆண்களைப் போன்றே சரிசம பங்கு உண்டு என்று கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே 20.12.2004க்கு முன்னர் பாகம் பிரித்துக் கொண்ட சொத்துக்கள் தவிர மற்ற பூர்வீகச் சொத்தில் பெண்களும் உரிமை கொண்டாடலாம்.

அழகுக் குறிப்பு...

மரியாதைக்குரியவர்களே,              
                       வணக்கம். அழகு குறிப்பும் படிப்போமா?
 
அசத்தலான அழகுக்கு!
தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும். வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்.
வாரம் ஒரு முறை பப்பாளிப் பழத்தை நன்றாகப் பிசைந்து, அந்தக் கூழை முகத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் உலரவைத்து பின் குளிக்கலாம். இது சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும்.
இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.
வாரம் ஒரு முறை பால், பாதாம் அல்லது பிஸ்தா பருப்புடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தின் மீது 15 நிமிடங்கள் பூசிவிட்டுக் குளித்தால் மிகவும் நல்லது.

வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும்.
மாதம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்வது, ஆவி பிடிப்பது, நீராவிக் குளியல்போடுவது மிகவும் நல்லது.
கிரீம்கள் மற்றும் பவுடர்கள் வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதால், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது, சூரிய ஒளிக்கதிர்கள் படுமாறு 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வது போன்றவை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

பொது அறிவினை பட்டை தீட்டுங்க!.........

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். இதோ பொது அறிவு பட்டை தீட்ட..............
      . WWF - World Wide fund for Nature
இந்த நிறுவனம் உலகம் முழுவதும் வன உயிரினங்களையும் வனப்பகுதிகளையும் பாதுகாக்க என்று ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்! 

 <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
1.சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.
2.ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.
3உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
4.மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
5.இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யா
6.விலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.
7.மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியா
8.தோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு
9.மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)
10.கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.
11 • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
12• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
13• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
14• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
15• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
16• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.
17• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
18• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.
19• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
20• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.
21• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.
22• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
23• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.
24• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
25• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.
26• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.
27*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

இந்திய விடுதலை வீர முழக்கங்கள்.....

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்திய விடுதலைக்கான தெய்வங்கள் உதிர்த்த வீர முழக்கங்கள் பற்றி காண்போம்.....

1) சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை >>> பால கங்காதரத் திலகர்..............
2) வந்தே மாதரம் >>> பக்கிம் சந்திர சட்டர்ஜி......
3) இந்தியா வீழ்ந்தால் யார் வாழ்வர் >>> ஜவஹர்லால் நேரு...
4) இன்குலாப் ஜின்தாபாத் >>> முகம்மது இக்பால்.......
5) செய் அல்லது செத்து மடி >>> காந்திஜி..........
6) ஜெய் ஹிந்த் >>> சுபாஷ் சந்திரபோஸ்........
7) இரத்தத்தை கொடு உனக்கு நான் சுதந்திரம் வாங்கித் தருகிறேன் >>> சுபாஷ் சந்திரபோஸ்.........
8) சோம்பியிருப்பது குற்றமாகும் >>> ஜவஹர்லால் நேரு........
9) வெள்ளையனே வெளியேறு >>> காந்திஜி......
10) நான் ஒரு இந்தியன் >>> சுவாமி விவேகானந்தர்..........
11) டில்லி சலோ >>> சுபாஷ் சந்திரபோஸ்........
12) ஜன கண மன >>> ரவீந்திரநாத் தாகூர்.....
13) யுரேகா! யுரேகா! >>> ஆர்க்கிமிடிஸ்........
14) ஹே! ராம் >>> காந்திஜி........
15) என் மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் >>> லாலா லஜபதிராய்...........

ஒரு புகாரை பதிவு செய்வது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
காவல் துறை எந்த எந்த சூழ்நிலைகளில், 
                    ஒரு புகாரை பதிவு செய்ய வேண்டும் ?
ஒரு குற்றமுறு செயல் நடந்திருக்கிறது என்று ஒருவர் தெரிவிக்கும்போது, காவல்துறை, தேவைபட்டால், ஒரு அடிப்படை விசாரணை செய்து விட்டு, கீழ்கண்ட விஷயங்களில், முதல் தகவல் அறிக்கை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும், என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பான, Lalita Kumari v. Govt. of U.P., (2014) 2 SCC 1. Date of decision: 12/11/2013, கூறுகிறது.
a. திருமண பிரச்சினைகள் / குடும்ப பிரச்சினைகள்
b. வணிக குற்றங்கள்
c. மருத்துவ கவனக்குறைவான விஷயங்கள்
d. லஞ்ச வழக்குகள்
e. கிரிமினல் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதில் அபரிமிதமான கால தாமதம் இருந்தால், (உதாரணமாக, ஒரு சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அதை தெரிவிக்காமல் போனதற்கு), ஏற்க கூடிய விளக்கம் அளிக்காமல் போனால்.
f. மேலே சொன்னவை பூராவும், ஒரு உதாரணமே, ஒரு முதல் கட்ட விசாரணையை ஆரம்பிக்க இவை பூராவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
g. புகார்தாரர் மற்றும் குற்றவாளியின் உரிமையை பாதிக்காதவாறு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், ஏழு நாட்களுக்கு மிகாமல், ஒரு முதல் கட்ட விசாரணையை உரிய காவல் அதிகாரி செய்ய வேண்டும். இதற்கான கால தாமதத்தை, பொது டைரிஇல், புலனாய்வு அதிகாரி எழுத வேண்டும்.
குற்ற வழக்கு பதிய தவறினால்?
***********************************************
சட்டபடியான ஒரு கடமையை செய்ய ஒரு புலனாய்வு அதிகாரி தவறும்போது, அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 154 இன் படி வழக்கு பதிவு செய்ய தவறும்போது, , இந்திய தண்டனை சட்டம் பிரி வு 217 இன் படி, அது ஒரு குற்றம்,

“ஒருவரை சட்டபடியான தண்டனையிலிருந்து காப்பாற்றும் உட்கருத்துடன், அல்லது அதனால் அவரை அநேகமாக காப்பாற்ற கூடும், அல்லது அவர் ஆளாக கூடிய தண்டனைக்கும் குறைந்த தண்டனையை அடைய செய்ய கூடும்! என்று அறிந்து, அல்லது சொத்தை காப்பாற்றும் உட்கருத்துடன் அல்லது அதனால் சொத்து எதையும் தண்ட இழப்பிநின்றும் அல்லது சட்டப்படி அது உள்ளாக்கபட்டிருக்கும் பொறுப்பு எதனின்றும் தம்மால் அநேகமாக காப்பாற்றப்பட கூடும் என்று அறிந்திரிக்கிற ஒரு பொது ஊழியர் என்ற முறையில் அவர் நடந்து கொள்ள வேண்டிய வகைக்கான சட்டத்தின் உத்தரவு எதனையும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்”
SC &ST (Prevention of Atrocities) Act, படி, ஒரு புகார் மீது ஒரு காவல் அதிகாரி வழக்கு பதிய செய்ய தவறினால், இந்த சட்டப்படி, அவரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாவார்.
குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 2013 இல் ஏற்பட்ட amendment படி, புலனாய்வு அதிகாரி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166-A இன் படியும் தண்டிக்கப்பட கூடியவர் ஆகிறார். “
166A. ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு, சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாதிருக்கின்ற பொது ஊழியர்—
ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமளிருப்பதால், எவருக்கேனும் கேடு விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக கேடு விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைக்கான சட்டத்தின் ஆணை எதற்கும் அறிந்தே கீழ்படியாமலிருந்தால்,

(d) knowingly disobeys any direction of the law which prohibits him from requiring the attendance at any place of any person for the purpose of investigation into an offence or any other
(e) knowingly disobeys, to the prejudice of any person, any other direction of the law regulating the manner in which he shall conduct such investigation, or

அல்லது
(f) ஒரு குற்றமுறு செயல் நடந்து, அது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 326A, 326B, 354, 354B, 370, 370A, 376, 376A, 376B, 376C, 376D, 376E அல்லது 509 படி தண்டிக்ககூடிய குற்றமாக இருந்து, அதை பற்றி தகவல் கிடைத்தும், குற்றவியல் விசாரணை முறை சட்டம், 1973, பிரிவு, 154(1) இன் படி, அதை புலனாய்வு அதிகாரி பதிவு செய்ய தவறினால், எவரொருவரும், ஆறு மாதங்களுக்கு குறையாமல், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடும்காவல் தண்டனையும், அதனுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படலாம் மேலும் இது cognizable குற்றமாகும்.

(f) fails to record any information given to him under sub-section (1) of section 154 of the Code of Criminal Procedure, 1973, in relation to cognizable offence punishable under section 326A, section 326B, section 354, section 354B, section 370, section 370A, section 376, section 376A, section 376B, section 376C, section 376D, section 376E or section 509 of Indian Penal Code,
shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years, and shall also be liable to fine and it is a cognizable offence.

இது தவிர, குற்றமுறு செய்கையை ஒரு புகார் விவரித்தும், ஒரு புலானாய்வு அதிகாரி, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தவறினால், துறை விசாரணைக்கும் அவர் ஆட்படுத்தபடுவார்.
நன்றி – Know your Laws


குற்றபத்திரிக்கை என்றால் என்ன?
ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்யும் பிரிவு, (உதாரணம் -காவல்துறை ) குற்றம் செய்தவர்களை பற்றி தயாரிக்கும் ஒரு ஆவணம்.
இது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் இது சமர்பிக்கபட்டவுடன், யார் குற்றம் இழைத்தார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறதோ, அவர்கள் மேல், வழக்கை தொடர்ந்து நடத்த, உத்தரவிடும்.
முதல் தகவல் அறிக்கையின் தொடர்ச்சியே, குற்ற பத்திரிக்கை.
குற்ற பத்திரிக்கையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களை சேர்க்காமலும் விடலாம். சேர்க்காமல் விட, போலீஸ் காரணம் சொல்ல வேண்டும்.
புகார் மனுதாருக்கு, காவல் துறை சரியாக விசாரிக்காமல், விட்டு விட்டதாக எண்ணம் இருந்தால், மீண்டும் விசாரிக்க சொல்லி, அதே வழக்கில், அதே நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அல்லது உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.

குற்ற பத்திரிக்கையில் புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு
மூலங்கள் இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு மூலம் இருக்கும்.

புகார் மனு, முதல் தகவல் அறிக்கை, குற்ற பத்திரிக்கை ஆகியவற்றில் உள்ள முரண்களை வைத்தே, குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள்.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து, அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி செய்ய தவறினால், பிணை கிடைக்காத குற்றவாளிக்குக் கூட பிணை கிடைக்கக் கூடும்.
உரிய காலத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால், புகார் மனுதார், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ, வழக்கு தொடுத்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லலாம்.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...