30 மார்ச் 2014

நமக்கேற்ற குளிர்சாதனப்பெட்டி....

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.வெயில் காலம் தொடங்கிவிட்டது!.எளிமையான குளிர்சாதனம் இதோ உங்களுக்காக....
               எளிதான சிறிய குளிர் சாதன பெட்டி. முயற்சி செய்து பாருங்கள், தவறாமல் நண்பர்களிடம் பகிருங்கள்
கோடை காலம் தொடங்கிவிட்டது! தமிழ்நாட்டிற்கு மின்வெட்டும் தொடங்கிவிட்டது!

கோடை காலத்தில் வீட்டில் உள்ள உணவுப்பொருள்களை குளிர்சாதன பெட்டி இல்லாமல் கெடாமல் குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள இந்த இயற்கை முறையை பயன்படுத்தலாம்.

ஒரு சிறிய மண்பானையை எடுத்து ஒரு பெரிய மண்பானை உள்ளே வைத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டிற்கும் இடையே ஈரமான மணல் நிரப்பி, உணவுப்பொருள்களை சிறிய மண்பானையில் வைத்து ஈரபதத்துடன் உள்ள துணி கொண்டு மூடிவைக்க வேண்டும்.

இந்த நீர் ஆவியாகும் போது உள்ளே இருக்கும் வெப்பம் இழுக்கப்பட்டு, உணவுப்பொருள்களை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.

இவ்வாறு செய்வதனால் மூன்று நாட்களில் அழுகிவிடும் பொருட்கள் கூட மூன்று வாரங்கள் வரை அழுகாமல் நீடித்து இருக்கும். இது ஒரு இயற்கையான, பக்கவிளைவுகள் இல்லாத, மலிவான மற்றும் பயன்படுத்த எளிதான சிறிய குளிர் சாதன பெட்டி. முயற்சி செய்து பாருங்கள், தவறாமல் நண்பர்களிடம் பகிருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...