08 நவம்பர் 2013

கலையிழந்த கிராமிய கலைகள்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
                               கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் கிராமிய கலைகள் பற்றி ஒரு பார்வை.........

கலையிழந்த கிராமிய கலைகள் 

கலையிழந்த கிராமிய கலை 
கலங்கி நிற்கும் மக்கள் கதை 
கேளுங்கய்யா எங்க கதை 
பாடிபுட்டோம் சோகக்கதை 

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ 
அடியோடு அழியும் நிலை 
அவலத்தில் எங்க நிலை 
அறிந்திடுவீர் அவல நிலை 

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ 
படிப்படியா அழியும் நிலை 
பரிதவிப்பில் எங்க நிலை 
பட்டினியில் சாகும் நிலை 

நயமாய் வளர்த்த கலை - இப்போ 
நலிவடைந்து நிற்கும் கலை ! 
நாட்டத்தோடு வளர்த்த கலை 
நாதி யற்று நிற்கும் கலை! 

கரகாட்டம் கட்டி நின்னா 
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ 
பசியிலே கிறங்கி நாங்க 
பரிதவித்து நிற்கிறோமே ! 

மயிலாட்டம் ஆடி நின்னா 
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ 
மறித்து போக மனமின்றி 
மயங்கி நாங்க நிற்கிறோமே! 

தப்பாட்டம் ஆடிபுட்டா 
தாறுமாறா கூடும் கூட்டம் 
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ 
படும் பாடோ திண்டாட்டம் ! 

தென்மாங்கு பாடிபுட்டா 
தெருவே கூடிநிற்கும் - இப்போ 
தேடுவார் யாருமின்றி 
தெருவிலே நிற்கிறோமே ! 

மெட்டு கட்டி பாடிபுட்டா 
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ 
பச்சபுள்ள பட்டினியா 
தொட்டிலிலே ஆடுதடா! 

கூத்துக்கட்ட ஆளிருந்தும் 
கூடுவார் யாருமில்ல ! 
பாட்டுக்கட்ட ஆளிருந்தும் 
பசி தீர்க்க யாருமில்ல ! 

சின்னத்திரை வெள்ளித்திரை 
சேர்ந்து செய்த சதிவலை 
ஆனதய்யா திரை சீலை 
போனதய்யா எங்க வேலை 

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு 
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ 
பட்டினத்தார் பாதம் தொட்டு 
நிற்கிறோமே வெக்கம் கெட்டு 

தெருவிலே கூத்துக் கட்டி 
தென்மாங்கு பாட்டுக்கட்டி 
படிச்சவன் பாடு -இப்போ 
நடுத்தெருவில் நிக்குதய்யா ! 

வயிற்ரை கட்டி வாயை கட்டி 
கலை வளர்த்த குடும்பமெல்லாம் 
கழுத்துல கயிறைக் கட்டி 
தூக்குல தொங்குதய்யா! 

ஆயர்கலை அறுபத்தி நான்கும் 
அழிகின்ற அவல நிலை 
அழியாத கலையாக என்றும் 
நிலை வாழ துணை செய்வீர் !
PM John Paul
  கலையிழந்த கிராமிய கலைகள்

கலையிழந்த கிராமிய கலை
கலங்கி நிற்கும் மக்கள் கதை
கேளுங்கய்யா எங்க கதை
பாடிபுட்டோம் சோகக்கதை

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ
அடியோடு அழியும் நிலை
அவலத்தில் எங்க நிலை
அறிந்திடுவீர் அவல நிலை

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ
படிப்படியா அழியும் நிலை
பரிதவிப்பில் எங்க நிலை
பட்டினியில் சாகும் நிலை

நயமாய் வளர்த்த கலை - இப்போ
நலிவடைந்து நிற்கும் கலை !
நாட்டத்தோடு வளர்த்த கலை
நாதி யற்று நிற்கும் கலை!

கரகாட்டம் கட்டி நின்னா
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ
பசியிலே கிறங்கி நாங்க
பரிதவித்து நிற்கிறோமே !

மயிலாட்டம் ஆடி நின்னா
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ
மறித்து போக மனமின்றி
மயங்கி நாங்க நிற்கிறோமே!

தப்பாட்டம் ஆடிபுட்டா
தாறுமாறா கூடும் கூட்டம்
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ
படும் பாடோ திண்டாட்டம் !

தென்மாங்கு பாடிபுட்டா
தெருவே கூடிநிற்கும் - இப்போ
தேடுவார் யாருமின்றி
தெருவிலே நிற்கிறோமே !

மெட்டு கட்டி பாடிபுட்டா
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ
பச்சபுள்ள பட்டினியா
தொட்டிலிலே ஆடுதடா!

கூத்துக்கட்ட ஆளிருந்தும்
கூடுவார் யாருமில்ல !
பாட்டுக்கட்ட ஆளிருந்தும்
பசி தீர்க்க யாருமில்ல !

சின்னத்திரை வெள்ளித்திரை
சேர்ந்து செய்த சதிவலை
ஆனதய்யா திரை சீலை
போனதய்யா எங்க வேலை

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ
பட்டினத்தார் பாதம் தொட்டு
நிற்கிறோமே வெக்கம் கெட்டு

தெருவிலே கூத்துக் கட்டி
தென்மாங்கு பாட்டுக்கட்டி
படிச்சவன் பாடு -இப்போ
நடுத்தெருவில் நிக்குதய்யா !

வயிற்றை கட்டி வாயை கட்டி
கலை வளர்த்த குடும்பமெல்லாம்
கழுத்துல கயிறைக் கட்டி
தூக்குல தொங்குதய்யா!

ஆயர்கலை அறுபத்தி நான்கும்
அழிகின்ற அவல நிலை
அழியாத கலையாக என்றும்
நிலை வாழ துணை செய்வீர் !
நன்றிங்க;-PM John Paul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...