02 அக்டோபர் 2012

தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளிக்கும் விதமாக T.N.S.F.ஈரோடு  சார்பாக நடந்து வரும் நிகழ்வுகள் பற்றி இங்கு காண்போம்.
  

   இன்று (02-10-2012) ஈரோடு மாநகர்-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணித மேதை ராமானுஜர் 125-வது ஆண்டுவிழா வரவேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 முடிவற்றதைக் கண்ட மாமனிதன் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆண்டை மத்திய அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையத்தின் வழிகாட்டுதல் பேரில் கணித மேதை பிறந்த ஈரோட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மையத்தின் பொறுப்பில் நிறைவுவிழா நடத்த அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரவேற்புக்குழு கூட்டம் நடைபெற்றது.



 இக்கூட்டத்திற்கு  பேரா.V.பெருமாள் அவர்கள்  TNSF மாவட்ட துணைத் தலைவர்,அவர்கள் தலைமை ஏற்றார்.



திருமிகு.R.மணி அவர்கள் TNSF மாவட்டச் செயலாளர்,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் DR.பேரா.N.மணி அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்

மரியாதைக்குரிய கணிதத்துறை பேராசிரியப்பெருமக்கள் உரைநிகழ்த்திய காட்சிகள்.











 திருமிகு.R. சக்கரவர்த்தி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உரையாற்றிய காட்சி


 மரியாதைக்குரிய,ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி

    திருமிகு.ஆ.கதிரேஷ் அவர்கள், கணித ஆசிரியர் . (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தட்டக்கரை-அந்தியூர்) உரை நிகழ்த்திய காட்சி.







 திருமிகு.பா.ஸ்ரீதர் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு) உரை நிகழ்த்திய காட்சி.


 திருமிகு.M.பாலு அவர்கள் (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியல் கல்லூரி)உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.


 திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ERODE-) நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
    {இக்கூட்டத்தில் திருமிகு.சி.பரமேஸ்வரன் அவர்கள் (தலைவர்-தாளவாடி ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உட்பட மேலும் பல கணித ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் உரை நிகழ்த்தினர்.}

   
     தேசிய கணித ஆண்டின் நிறைவு விழாவின் வரவேற்புக்குழுவிற்கு  


     தலைவராக- 
    திருமிகு.M.பாலகிருஷ்ணன் அவர்களும்
   (முன்னாள் செயலாளர்-கொங்கு கல்வி நிலையம் -ஈரோடு)
செயலாளராக 
   திருமிகு.R.மணி அவர்களும்
  (மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு)  துணைத்தலைவர்களாக 
     (1)திரு.M.பாலு அவர்கள்
   (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியற் கல்லூரி)
   (2)Dr.நாகராஜ் அவர்கள் (கணிதத்துறை தலைவர்-கொங்கு கலை அறிவியல் கல்லூரி) 
    (3)Dr.V.பெருமாள் அவர்களும் (T.N.S.Fஈரோடு.மாவட்ட துணைத் தலைவர்)     
(4)பேரா.R.விஸ்வநாதன் அவர்களும்(கொங்கு பொறியியல் கல்லூரி)

இணைச்செயலாளர்களாக 
   (1)திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்
 (தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஒன்றியம்)(2)திருமிகு,P.ஸ்ரீதர் ஆசிரியர் அவர்களும்
 (அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு வட்டார வள மையம்) (3)மரியாதைக்குரிய,பேரா. மேரி டயானா அவர்களும்
   (பாரதிதாசன் கலைக்கல்லூரி) 
  (4)திருமிகு.N.வேலுமணி அவர்களும்
   (செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)(5)திருமிகு.N.சண்முக சுந்தரம் ஆசிரியர்  அவர்களும்,
   குழு உறுப்பினர்களாக 
   ஈரோடு மாவட்ட TNSF செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது மற்றும் 
  மரியாதைக்குரிய டாக்டர்,பேரா.N.மணி அவர்கள் (T.N.S.F.மாநிலத்தலைவர்) தேசிய கணித ஆண்டின் நிறைவுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொண்டு வழிகாட்டுவது.என இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை வழங்கினார்.

 
  

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...