07 மார்ச் 2012

உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்

Wednesday, March 7, 2012




அன்பு நண்பர்களே,
     PARAMES DRIVER-வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.08-03-2012 நாளை உலக மகளிர் தினம்.
உலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.







March 8, 2011 உலக மகளிர் தினம்

இம்மண்ணில் மனித இனம் தோன்றியது.

இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும்.

மண் வளத்தை நினைப்பவர்கள்
வன வளத்தை நினைப்பவர்கள்
பெண் வளத்தையும் நினைக்க வேண்டும்.

பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பார்
பெண் பெண் ஈன்றால் முகம் சுளிப்பார்
தன் இனத்தை தானே அழிக்க
நினைப்பதுவும் இவ்வினமே!

நதி ஆனாள்,
காற்று ஆனாள்,
மலை ஆனாள்,
தேசம் ஆனாள்,
தெய்வம் ஆனாள்,
ஆனால் அவளுக்கென்று
ஓர் வரம் கேட்க மறந்தாள்.

வீட்டிலும், நாட்டிலும்,
வெளியிலும், வெய்யிலிலும்
வேளை தவராமல் வேலை.

வேலை முடித்து வந்தாலும்
முடிக்காமல் வந்தாலும்
சமூகம் குத்தும் சொல்லால் வேலை.

ஆத்திரக்காரி, அன்புக்காரி,
அதிகாரக்காரி, அமைதிக்காரி
என்று தூற்றிப் போற்றி
இவ்வினத்தை எது வேண்டுமானாலும் செய்யலாம்.!
இவ்வினத்திற்கு கொண்டாடும் தினம் தான் உலக மகளிர் தினம்.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...