09 பிப்ரவரி 2011

தன்னார்வத் தொண்டு நிறுவனம்-


                          தன்னார்வத் தொண்டு 
            ++++++++++++++++++++++++

நிறுவனம்-ஒரு அலசல்...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


      
அன்பு நண்பர்களே,
=============================
                          ணக்கம்.தன்னார்வப் பணி அல்லது தொண்டுப் பணி என்பது பணம்,பொருள் என எவ்விதக் கைம்மாறு இல்லாமல் ஒரு நோக்கத்திற்காக அல்லது ஒரு கொள்கைக்காக தமது உழைப்பினை வழங்குவது ஆகும்.

              றவினர்களுக்கு உதவுவது முதலாக அமைப்புகளில்,படைத்துறைகளில்,அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது வரை எனப் பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன.
    
          தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பிற வாழ்க்கைத் தேவைகளை அனைவருக்கும் கிடைக்க வைத்து இந்த மனித சமூகம் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஆகும்.
       
             ன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சமுதாயத்திற்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார்.

          பல தன்னார்வலர்கள் அரசு சாரா அமைப்பு மூலம் சேவை செய்கின்றனர்.சில வேளைகளில் இவர்கள் முறை சார்ந்த தன்னார்வலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
      
          ன்னார்வலர்கள் தனக்காக எந்த வித நிதி மற்றும் பொருள்களை வாங்க மாட்டார்கள்.அதே சமயம் பொதுச்சேவைக்காக தனது பணத்தைச் செலவு செய்திருந்தால், அந்த (செலவு செய்த) சொந்தப் பணத்தை மட்டும் திரும்பப் பெற்றுக் கொள்வர்.
   
        ,ணமின்மை,நேரமின்மை,மனமின்மை,திறனின்மை,போன்ற காரணங்களைக் காட்டி பொதுச்சேவை செய்ய ,  தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றப் பெரும்பாலோர் முன் வருவதில்லை.இது வருத்தப் படக் கூடிய விசயமாகவே உள்ளது.
       
         நமது நாட்டில் பசி,நோய்கள்,கல்வியறிவு இல்லாமை,என உயிர் போகும் விசயங்கள் ஏகப்பட்டவை உள்ளன. அவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.அப்போதுதான் நம்நாடு பிற நாடுகளுக்கு இணையாக வளர முடியும்.            
                       நமது மக்கள் அனைவரும் சத்தான உணவு, சுகாதாரம்,ஆரோக்கியம்,சிறந்த கல்வி பெற்று பல விசயங்களைத் தெரிந்து அறிவில் சிறந்து விளங்கி ,நமது நாடும் அறிவியல் வளர்ச்சி பெற்று தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு இணையாக, வல்லரசு நாடாக சிறப்படைய முடியும்.
   
       னவே,நாம் நமது பொருளாதாரத்தைப் பெருக்கி ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து,வீண் செலவுகளைக் குறைத்து,சிக்கனத்தைக் கடைப்பிடித்து,சுகாதாரம் காத்து,உடல்நலம் காத்து
                    தன்னொழுக்கம் பெற்றவர்களாக,பிறருக்கு உதவி செய்பவர்களாக,அயராது தினசரி,வாரம் ஒருநாள்,மாதம் ஒருநாள்,வருடம் ஒருநாள் எனத்
             தங்களால் இயன்ற அளவு, இயன்ற நேரங்களில்,நம்மால் முடிந்த அளவு நமது சமுதாயத்திற்காக உழைத்து ,மனித நேயம் போற்றி,
              பிறருக்கு உதவி செய்து,இயற்கை வளங்களைக் காத்து, இளைய சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டி
                 அனைவரும் நிம்மதியாக வாழத் துணை நிற்போமாக.  
              ===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...